நிவாரணக் கிராமங்களில் அரச வைத்திய முகாம்

idps200_1.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன் கருதி அரசாங்கம் தினமும் வைத்திய சிகிச்சை முகாம்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் வலயங்களிலுள்ள நலன்புரி நிலையங்களிலும் இந்த வைத்திய சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இந்த வைத்திய சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு காயமடைந்தோருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *