இந்திய மருத்துவர் குழு இன்று இலங்கை வருகை

indian-madi.jpgஇலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு இந்திய மருத்துவர் குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 8 மருத்துவர் உட்பட 27 பேர் அடங்கிய குழு 25 தொன் நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது புல்மோட்டை பகுதியில் 110 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவ முகாமை வவுனியாவுக்கு மாற்றுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும் பிரிகேடியர் பி.சச்டேவா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

பாலம் விமானத்தளத்திலிருந்து இன்று காலை விங் கொமாண்டர் எச்.பி.குமார் தலைமையில் இந்திய விமானப் படையின் ஐஎல் 76 ரக விமானத்தில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் அவை இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli.
    palli.

    இதுதான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கலை என்பதோ??

    Reply