மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார். அவர் மேலும், ‘’நாளை சென்னையில் திமுக செயற்குழு கூடுகிறது’’ என்று தெரிவித்தார்.
டெல்லியில் நாளை மன்மோகன்சிங் பிரதமாரக பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் சென்னையில் திமுக செயற்குழு கூடுவதால் முதல்வர் கருணாநிதி பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று பேசப்படுகிறது.