தகவல் திணைக்களத்தின் துரித குறுந்தகவல் செய்தி ஜனரஞ்சகம் பெற்றுள்ளது

directoinformation_.jpgஅரசாங்க தகவல் திணைக்களம் டயலொக் டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து வழங்குகின்ற துரித குறுந்தகவல் செய்திச் சேவை ஆரம்பிக்கப்பட்டு 3 வாரங்களுக்குள் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் அதனுடன் இணைந்துள்ளதாக தகவல் திணைக்களப் பணிப்பாளர் அநுஷபெல்பிட்ட தெரிவித்தார்.

இத்துரித குறுந்தகவல் செய்திச் சேவையினூடாக தேசிய ரீதியான முக்கிய மற்றும் சூடான செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் டயலொக் தொலைபேசி வாடிக்கையாளர்களை இச்செய்தியின் தரமும் அதன் வேகமும் கவர்ந்துள்ளதன் காரணமாகவே இச்சேவைiயில் இணைவோரின் தொகை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

டயலொக் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த துரித குறுந்தகவல் சேவையை ‘இன்போ’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு 678 எனும் இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ். செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *