இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்க விசேட நடவடிக்கையெடுக்கப்படும் – பிரதிக்கல்வியமைச்சர்

shachi.jpgகொடூர யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு அவசர கல்வியை செயற்படுத்தும் வகையில் பிரதிக்கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தலைமையிலான கல்வி அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் வவுனியா செல்லவுள்ளது.

இது தொடர்பாக பிரதிக்கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

அமைச்சர் சச்சிதானந்தனால் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவிற்கு வழங்கிய பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் மருந்துவகைகளுடன் இக்குழு செல்லவுள்ளது.

“”யுத்தத்தின் காரணமாக இதுவரை நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்வுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் மோதல்கள் இடம்பெற்றுவரும் பகுதிகளிலுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சில பாடசாலைகளில் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில பாடசாலைகள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் சமூகமும் இவ் இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வியைத் தொடர உடனடிச் செயற்பாடுகள் அவசியம்.

இது தொடர்பில் ஜனாதிபதி, கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடத்தினோம். அதன் பயனாக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் மருந்துவகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் அடுத்த வாரமளவில் நாம் வன்னி செல்லத் தீர்மானித்துள்ளோம். இதன்போது மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *