இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ‘’இலங்கை பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்க வில்லை என்று கூறுவது தவறு. அங்கு தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றி அறிந்த தமிழர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் அனைவரையும் வென்று விட்டதாக ராஜபக்சே எண்ணலாம். ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே கிடையாது. வேறுவிதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். அதன் பாதிப்பு தமிழகத்திலும் எதிரொலிக்கும்’’ என்று தெரிவித்தார்.
பார்த்திபன்
தமிழக உறவுகளின் கரிசனைகள் நாம் அறியாதவை இல்லை. அவர்கள் காட்டும் கரிசனையை வைத்து, மீண்டும் நீங்கள் படம் காட்டலாமென பார்க்கின்றீர்கள். பார்த்துங்க தேர்தலில் படித்த பாடத்தை மறந்து, மீண்டும் படம் காட்ட முயன்று, அரசியலிலேயே காணாமல் போய் விடப் போகின்றீர்கள்.