இலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளுடனான மோதலை நிறுத்த சர்வதேச அளவில் கோரிக்கைகள் வெளியாகியுள்ள போதிலும், புலிகளுக்கு எதிரான தமது இராணுவத் தாக்குதலை தொடர்ந்து நடத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அங்கு கடுமையான போர் இறுதிக் கட்டத்தில் நடப்பதை முள்ளிவாக்கால் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள புலிகளின் தகவல் தொடர்பு கோபுரங்கள் நேற்று தகர்க்கப்பட்டு விட்டன. எனவே இனி சட்டர்லைட் தொலை பேசியில்தான் நிலமைகளை கேட்க முடியும்.
இது அரசுக்கு சார்பானதாகவே இருக்கிறது. இனி அங்கு நடக்கும் அவலங்கள் ஒளிக் காட்சிகளாகவோ அல்லது புகைப்படமாகவோ கிடைப்பது அரிதாகிவிடும். இது மக்களின் இழப்புகளை அதிகரிக்கும்.
அங்கிருந்து கிடைக்கும் தகவல் பதற்றமாக இருப்பதை உணர்த்துகிறது.
படகு ஒன்றின் மூலம் மோதல் பகுதியிலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் வெளியேறிய , கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி (சத்யதேவி) மற்றும் 2 பிள்ளைகள் (17 வயது மகள் / 16 வயது மகன்) உட்பட உறவினர்கள் கடற்படையினரால் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுதா மற்றும் குடும்பத்தினரும் கைதாகியுள்ளனர். பெருந் தொகையான நகைகளும் 6 லட்சம் ரூபா பணமும் இவர்களிடம் இருந்ததாக கடற்படை மேலும் தெரிவிக்கிறது.
மாயா
அங்கு கடுமையான போர் இறுதிக் கட்டத்தில் நடப்பதை முள்ளிவாக்கால் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள புலிகளின் தகவல் தொடர்பு கோபுரங்கள் நேற்று தகர்க்கப்பட்டு விட்டன. எனவே இனி சட்டர்லைட் தொலை பேசியில்தான் நிலமைகளை கேட்க முடியும்.
இது அரசுக்கு சார்பானதாகவே இருக்கிறது. இனி அங்கு நடக்கும் அவலங்கள் ஒளிக் காட்சிகளாகவோ அல்லது புகைப்படமாகவோ கிடைப்பது அரிதாகிவிடும். இது மக்களின் இழப்புகளை அதிகரிக்கும்.
அங்கிருந்து கிடைக்கும் தகவல் பதற்றமாக இருப்பதை உணர்த்துகிறது.
நண்பன்
படகு ஒன்றின் மூலம் மோதல் பகுதியிலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் வெளியேறிய , கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி (சத்யதேவி) மற்றும் 2 பிள்ளைகள் (17 வயது மகள் / 16 வயது மகன்) உட்பட உறவினர்கள் கடற்படையினரால் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுதா மற்றும் குடும்பத்தினரும் கைதாகியுள்ளனர். பெருந் தொகையான நகைகளும் 6 லட்சம் ரூபா பணமும் இவர்களிடம் இருந்ததாக கடற்படை மேலும் தெரிவிக்கிறது.