லண்டனிலும், பிரான்ஸிலும் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்

temple1.jpgபிரான்ஸிலும், லண்டனிலும் அமைந்துள்ள இலங்கையர்களின் இரண்டு வழிபாட்டுத்தலங்கள் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளன. கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயிலின் ஆலய கோபுரம் இனந்தெரியாதோரால் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதாக ஆலயத் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை சந்தேகத்தில் கைது செய்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் அமைந்துள்ள சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால் தாக்கப்பட்டிருக்கிறது.

தாக்குதலை நடத்தியவர்கள் கற்களை வீசி மையத்தின் யன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்த பௌத்த மதகுரு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • thurai
    thurai

    புத்தசமயமென்றால் சிங்களவ்ர், இந்துக்கள் என்றால் தமிழர் இவர்கள் பரம்பரை எதிரிகள் இதுவே உலகிற்கு இலங்கையர் காட்டுவது. இரண்டு சமயங்களைச் சேர்ந்த சில தமிழரும் சிங்களவ்ரும் மனதில் அன்பு அற்ரவர்கள்.

    இலங்கையின் இன்றைய நிலைமைக்கு இந்த இரு சாராருமே காரணம். இவர்கள் நாயையும், மாட்டையும், பண்டியையும் கற்களையும் கையேந்தி வண்ங்குவார்கள். ஆனால் மனிதர்களை ஓட, ஓட, துரத்தி வெட்டிக் கொல்வார்கள். இவர்கள் உலகில் மனிதராக வாழவே தகுதியற்ரவர்கள்.

    துரை

    Reply
  • manithan
    manithan

    hindu and budhist belives a mad peaple couse of they belive dog,cow,pork,stone,realy mad peaple in the world,what the true of this religon,

    pls exlplain some me

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வேலுப்பிள்ளை பார்வதியின் புத்திரசீகாமணியும் புத்திரசீகாமணியின் ஆதரவாளர்களும் பிறந்த இடத்திலும் அல்லாமல் போனஇடத்திலும் அவலத்தை சந்திக்க வேண்டும் என்ற விதியிருக்கும் போது யார்தான் என்ன செய்யமுடியும்?

    Reply