பாதுகாப்பு வலயத்தின் தற்போதைய நிலைமைகள் அபாயகரமானவை, குறுகிய நிலப்பரப்பிற்குள் சிக்கியுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான கரிசனையும் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னியில் நிகழப் போகின்ற மனித பேரவலங்களை தடுத்து நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் தற்போது 1 இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் இருப்பதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பி.யுமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்
palli.
ஜயா தாங்கள் இப்போதும் கூதமைப்பில்தான் கும்மி யடிக்கிறீர்களா?? அல்லது தமிழர் கூட்டமைப்பாக மக்களுக்காக ஏதாவது செயல்பாடுகளில் இறங்கி விட்டீர்களா?
முன்னது எனில் தமிழ்சமுதாயம் உங்களை தூற்றும். பின்னதாக இருந்தால் தமிழ் மக்களுடன் பல்லியும் தங்களை வாழ்த்தும்.
நண்பன்
இவங்களின் உண்மையான முகம். வெளியே புலி. உள்ளே ஓணான்.