யூத வாதத்துக்கு எதிரான கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், அவை எங்கு காணப்பட்டாலும், எதிர்க்கப்பட வேண்டும் என்றும் போப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் கிறித்துவ புனிதத் தலங்களுக்கு அவர் மேற்கொண்டிருகும் யாத்திரையின் இறுதிக் கட்டமாக இஸ்ரேல் போய்ச் சேர்ந்த போப் ஆண்டவர், இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நாஜி ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட 60 லட்சம் யூத மக்களை அவர் நினைவு கூர்ந்ததோடு அவர் இஸ்ரேலிய பாலத்தீனயத் தலைவகளோடும் பேச்சு வார்த்தைகளை நடத்தினார். இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் தத்தமது தாய்நிலத்தில், சமாதானமாக வாழ் எல்லா வழிவகைகளும் ஆராயப்பட வேண்டும் என்றும் போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுளார்.