பிரான்ஸ் நாட்டில் உள்ள பௌத்த மத வழிபாட்டு இடம் ஒன்றை தமிழில் பேசியவர்கள் சிலர் தாக்கி சேதம் விளைவித்ததாக முறையிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் உள்ள சர்வதேச பௌத்த மையம் என்ற வழிபாட்டிடமே நேற்று மாலை அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டதாக அந்த வழிபாட்டிடத்தின் தலைமை மதகுரு தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டிடம் சோடனை செய்யப்பட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இது பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொத்தம் எட்டு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், வந்தவர்கள் தமிழில் பேசிக்கொண்டதாகவும், அவர்கள் கைகளில் தடிகள் கொண்டுவந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் ஆட்களே இதற்கு காரணம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்
mohamed nisthar
The article rightly highlights the issues. Sarcastic usue of words can be seen throughout the article, however I think that is not harm to make the readers laugh a bit to relieve from the persisting angony and emotions.
The point,however the uninformed and sometimes irretional readres to understant here, is the core issues,which are not the question of flag, leader of the Tamils and the shape of the territory the Tamils dream about, instead ,what the writer of this article puts acorss.
மாயா
நல்லது செய்யுங்க. தமிழீழம் இங்காவது கிடைக்குமா என்று பார்க்கலாம். 13 இராணுவத்தை தாக்கி கொன்றதால எழுந்த பிரச்சனை முழு தமிழனித்திலும் பாதியை சாகடிச்சிட்டுது. புலத்தில செய்யிற தாக்குதல்கள் இங்க உள்ள பாதியையும் சாகடிக்கும்.
msri
பெளத்த,சிங்கள பேரினவாதத்ததிற்கும்> சாதாரண பெளத்த,சிங்கள மக்களிற்கும் வித்தியாசம தெரியாத புலி ரசிகர்களின் நடவடிக்கைகள் புலம்பெயர் வாழ்வில்> பெரும்பாதிப்பை ஏற்படுததும்! புலம்பெயர் மக்கள் மத்தியிலிருந்து அந்நியமாகவுள்ளனர்!