இரானில் சிறை வைக்கப்பட்டுள்ள இராக்கிய அமெரிக்க செய்தியாளரான ரோக்சானா சபேரியின் மேல்முறையீட்டு மனு ஞாயிறன்று விசாரணைக்கு வரவுள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தி இவருக்கு கடந்த மாதம் எட்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின் போது தங்கள் தரப்பு கால அவகாசம் கோரவிருப்பதாக சபேரியின் தந்தை தெரிவித்துள்ளார்.