
முல்லைத்தீவிலிருந்து “கிறீன் ஓசன்’கப்பல் மூலம் வியாழக்கிழமை இரவு, காயமடைந்த மற்றும் நோயாளர்களென 493 பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல் இரவு 8.35 மணியளவில் புல்மோட்டை கடற்பரப்பை வந்தடைந்தது.