புலம்பெயர்நாடுகளில் வீதி விபத்துக்களில் தொடரும் தமிழர்கள் மரணங்கள்

புலம்பெயர்நாடுகளில் வீதி விபத்துக்களில் தொடரும் தமிழர்கள் மரணங்கள்

பிரித்தானியாவில் சறே ( Surrey) சட்டனில் மார்ச் 3ம் திகதி நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் கடவையினூடாக வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த விபத்தானது றோஸ்கில் பகுதியில் கிரீன் வீதி சட்டனில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இறந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சின்னதம்பி கருணாகரன் என்ற 49 வயது குடும்பஸ்தர் எனத் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை மெட்ரோ பொலிரன் ( Metropolitan )பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *