வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் மக்களிடம் ஒப்படைக்கப்படும் – ஜனாதிபதி

pr-tam-deli.jpgவடபகுதி முழுமையாக மீட்கப்பட்டு விரைவில் அங்குள்ள மக்களிடம் ஒப்படை க்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட பகுதியில் மிதி வெடி மற்றும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு சிவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அம்மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாகக் குடியேற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கென தமிழ்க் கட்சிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே ஜனாதிபதியினால் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்; பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர். அதனைக் கவனத்திற் கொண்ட ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள மக்கள் புலிகளின் நடவடிக்கைகளினால் உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அந் நிலையிலிருந்து அவர்களை மீட்கும் வகையில் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் அப்பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகோதர மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிய தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சகல தமிழ்க் கட்சிகளினதும் ஒத்துழைப்பு தமக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் எழும் சவால்களுக்கு இணைந்த பலத்துடன் முகங்கொடுத்த சகோதர மக்களைப் பாதுகாத்து அவர்களை நிரந்தர இடங்களில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட வருமாறும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்பாவி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர பயங்கரவாதிகளைப் பலப்படுத்துவதிலல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களைத் தாம் அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் இடங்களில் அவர்கள் மீண்டும் அவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்க மாட்டோமெனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நகர்ப்பகுதிகள் மட்டுமன்றி கிராமியப் பிரதேசங்களின் வீதி, மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம் உட்பட சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து விரைவில் அம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கைகளில் தமிழ்க் கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு அதில் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்படுமென தெரிவித்த ஜனாதிபதி எச்சந்தர்ப்பதிலும் எக்காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளுக்கு எத்தகைய ஆதரவும் வழங்கக்கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to Kullan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kullan
    Kullan

    மன்னிக்கவும் பிணங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று திருத்திக் கூறுங்கள். உயிர்வாழும் மக்களை விடப் பிணங்களே அதிகம். உயிருடன் இருப்பவர்களும் உணர்வுகள் இழந்த பிணங்கள்தான் இன்று

    Reply