ஐநா மனித உரிமை அரசியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைது ! அமெரிக்கா விலகுகின்றது !
ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இன்று முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழர்களுடைய மனித உரிமை அரசியலின் மிக வீச்சான காலகட்டமான இக்காலப்பகுதியில் தற்போது அசமந்த நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை தமிழ் மனித உரிமை அமைப்புகளின் முதகெலும்பாகச் செயற்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சாமூவேல் பொஸ்கோ சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் தீவிர வலதுசாரிக் கொள்கைகளோடு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தள்ள டொனால் ட்ரம் இம்மனித உரிமைக் கூட்டத் தொடரிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.
மார்ச் 3ம் திகதி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில் வாய்மூலமான புதுப்பிப்பு கேட்கப்படவுள்ளது. பொறுப்புக்கூறல் தொடர்பில் அமெரிக்கா கலப்பு நீதிமன்ற பொறிமுறையை பரிந்துரைத்து இருந்தது. தற்போது அமெரிக்க இக்கூட்டத்தொடரிலிருந்து விலகியுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசு உள்ளக பொறுப்புக் கூறல் பொறிமுறை ஒன்றையே வலியுறுத்தும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்காவில் டொனால் ட்ரம் இன் வருகையும் ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி அரசியல் அலையும் ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் அமெரிக்காவும் – ஐரோப்பிய ஒன்றியமும் முறுகல் நிலையில் உள்ள சூழலும் 2009 யுத்தம் தொடர்பான தமிழர்களின் அரசியல் சர்வதேசச் சூழலில் ஒரு பொருட்டாக அமையுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.