பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது – உயர் நீதி​மன்றம் அதிரடித் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது – உயர் நீதி​மன்றம் அதிரடித் தீர்ப்பு

சீமான் மீதான பாலியல் கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என உயர் நீதி​மன்றம் தீர்ப்​பளித்​துள்ளது.

திரு​மணம் செய்து கொள்​வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றிய​தால் விஜயலட்​சுமி சுமார் 7 முறை கருக்​கலைப்பு செய்துள்ளார். நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் முறைப்பாட்டின் பேரில் நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளரான சீமான் மீது 2011இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

புகாரை விஜயலட்​சுமி 2012-ம் ஆண்டே மீளப்பெற்றதால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர் நீதி​மன்​றத்​தில் அண்மையில் விசா​ரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது என மறுப்பு தெரி​வித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சா்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் 12வாரத்​துக்​குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்​டும் என பொலி​ஸாருக்கு உத்தர​விட்டு சீமானின் மனுவை தள்ளுபடி செய்​தார்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையில் வளர்ந்த சிலர் இவ்வாறானதொரு பாலியல் காமுகனைத் தங்கள் தலைவனாக போற்றிக் கொண்டாடிக்கொண்டு கேவலமான அரசியலைச் செய்ய முனைகின்றனர். காமுகனான சீமானுக்கு தான் தான் ஐடியா கொடுத்தேன் என்று இன்னுமொரு பாலியல் காமுகனைக் கும்பிடும் முன்னாள் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி இராசையா உமாகரன் ரிக்ரொக்கில் குதிக்கின்றார்.

உங்கள் கொட்டங்களை அடக்குகின்றேன். தந்தை பெரியாருக்கும் அம்பேக்காருக்கும் யாழ் மண்ணில் சிலை எழுப்புகின்றேன் என்று சவால் விட்டுள்ளார் ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *