பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
சீமான் மீதான பாலியல் கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் விஜயலட்சுமி சுமார் 7 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் முறைப்பாட்டின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 2011இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
புகாரை விஜயலட்சுமி 2012-ம் ஆண்டே மீளப்பெற்றதால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சா்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என குறிப்பிட்டார்.
மேலும் 12வாரத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என பொலிஸாருக்கு உத்தரவிட்டு சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையில் வளர்ந்த சிலர் இவ்வாறானதொரு பாலியல் காமுகனைத் தங்கள் தலைவனாக போற்றிக் கொண்டாடிக்கொண்டு கேவலமான அரசியலைச் செய்ய முனைகின்றனர். காமுகனான சீமானுக்கு தான் தான் ஐடியா கொடுத்தேன் என்று இன்னுமொரு பாலியல் காமுகனைக் கும்பிடும் முன்னாள் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி இராசையா உமாகரன் ரிக்ரொக்கில் குதிக்கின்றார்.
உங்கள் கொட்டங்களை அடக்குகின்றேன். தந்தை பெரியாருக்கும் அம்பேக்காருக்கும் யாழ் மண்ணில் சிலை எழுப்புகின்றேன் என்று சவால் விட்டுள்ளார் ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த்.