லண்டன் நோர்தஹொல்ற்றில் விதி விளையாடியது – ஈழத்தமிழர் மரணம் ! 

லண்டன் நோர்தஹொல்ற்றில் விதி விளையாடியது – ஈழத்தமிழர் மரணம் !

ஜனவரி 27 இல் லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான ரஞ்சன் எனும் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதி வேகமாக சாலைகளில் பயணித்த காரொன்றை துரத்திச் சென்ற பொலிஸார் றைசிலிப் என்ற வீதியில் வைத்து குறுக்கே மறித்த போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்கள் பின்பக்க இருக்கையில் இருந்து குதித்து ஓடி தப்பிவிட்டதாகவும் தெரிக்கப்படுகிறது. இருவர் கைதாகியுள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய மற்றைய நபரான ஈழத்தமிழர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கார் துரத்தல் தொடர்பில் வெளிநாட்டவர்களின் போதைப்பொருள் கடத்தல் குற்றப்பின்னணி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின் கிடுக்குப்பிடி விசாரணைகள் தொடர்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *