![]()
மட்டக்களப்பு பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா (8 வயது) என்ற சிறுமியில் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் 3 பேர் இன்று (05.05.2009) அதிகாலை சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கல்வியங்காடு பாரதி ஒழுங்கை பகுதியை சேர்ந்தவர்களான மகிந்ததாஸ் மயூரன் (வயது 24), எட்வேர்ட் ஜூலியட் ஸ்டனிஸ்லோஸ் (வயது 20), ஏரன்ஸ் ஒழுங்கையைச் செர்ந்த சம்பா எனப்படும் சோமசுந்தரம் அனுஷன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி மயூரன் என்பவரது வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.