பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக அவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

ட்ரூடோ மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வந்தனர்.

மேலும், ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது.

மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதேவேளை, வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளை அவர் கையாள்வதை சுட்டிக்காட்டி, அவர் வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

கட்சித் தலைவர் பதவியுடன், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தானே பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்தார்.

வரும் 8ம் திகதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *