டிக்டொக்குக்கு செவிசாய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் – தடை தடைப்படுமா?

டிக்டொக்குக்கு செவிசாய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் – தடை தடைப்படுமா?

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், டிக்டொக் செயலியைத் தடை செய்யும் முயற்சியை எதிர்த்து அதன் உரிமையாளர் ByteDance நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவை பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதியிலிருந்து டிக்டொக் மீதான தடை அமுலுக்குவரவுள்ள நிலையில் ஜனவரி 10ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமானோர் டிக்டொக் செயலியைப் பயன்படுத்துகின்றனர். டிக்டொக் செயலி மூலம் சீன அரசு அமெரிக்கப் பயனாளர்களின் தகவல்களைச் சேகரிக்கக்கூடும். இது தங்களது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக்கூறி அமெரிக்க அரசாங்கம் டிக்டொக்கை தடைசெய்ய முயற்சிக்கின்றது.

ஆனால், டிக்டாக் நிறுவனம், அமெரிக்காவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தடை டிக்டொக்கில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான பயனர்களையும் அவர்களுடைய வர்த்தகத்தையும் பாதிக்கும் இது வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே ByteDance நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவை பரிசீலிக்க அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

சீனச் செயலியான டிக்டொக்கை முடக்க அமெரிக்கா, இந்தியா போன்ற சீன வெறுப்பு நாடுகள் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் வி.பி.என் போன்ற செயலிகளின் ஊடாக பெரும்பாலானவர்கள் டிக்டொக்கை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்டொகின் பயனாளிகளின் தகவல்ககளை சீன அரசு பெற்றுக்கொள்ளுமானால் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சமூக வலைத்தளங்களின் பயனாளர்களின் தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன என்ற விடயமும் காலம் காலமாக உள்ளது.

இந்திய அரசு மைக்கிரோசொப்ற் வின்டோசைப் பயன்படுத்துவதில்லை. காரணம் அதனூடாக அமெரிக்க புலனாய்வு தங்களுடைய கணணிகளுக்குள் குதித்துவிடும் என்ற அச்சம். அண்மையில் இஸ்ரேல் மொசாட் உளவுப் பிரிவினர் லெபனான் ஹிஸ்புல்லாக்களின் பேஜர்கள் வெடித்துச் சிதற வைத்தது. மிகநுட்பமான மிகத்திட்டமிட்ட இத்தாக்குதலில் பல ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டனர். காயப்பட்டனர். எதிர்காலத்தில் விமானத்தில் பறக்கின்ற போது மோபைல்போன்களை வெடிக்க வைக்கவும் இவர்கள் முயற்சிக்கலாம். தொழில்நுட்பம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துகொண்டுள்ளது. இருக்கின்ற எதையும் வைத்து யாரையாவது கொல்வதற்கான வழியை மேற்குலகு புதிது புதிதாக கண்டுபிடித்துக்கொண்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *