டெங்கு காய்ச்சல் – தங்காலையில் மூடப்பட்டிருந்த 8 பாடசாலைகளும் இன்று திறப்பு

schools_stu.jpgடெங்கு காய்ச்சல் தீவிர நிலை காரணமாக சுமார் ஒரு வார காலமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தங்காலைப் பிரதேச எட்டுப் பாடசாலைகளும்இன்று (4ம் திகதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். எச். சுனில் நேற்றுத் தெரிவித்தார். இந்த எட்டுப் பாடசாலைகளினதும் சுற்றாடல், சுத்தம் தொடர்பான கண்காணிப்பு இன்று முதல் நான்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் தீவிர நிலைமை காரணமாக தங்காலை வலயக் கல்விப் பணியகத்திற்கு உட்பட்ட எட்டு பாடசாலைகள் கடந்த 28ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டன.

தங்காலை மகளிர் வித்தியாலயம், தங்காலை ஆண்கள் தேசியப்பாடசாலை, தங்காலை ராகுல வித்தியாலயம், தங்காலை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், தீபங்கர கனிஷ்ட வித்தியாலயம், பொலம்பாறுவ முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை ஆரம்பப் பாடசாலை ஆகிய எட்டு பாடசாலைகளுமே இவ்வாறு மூடப்பட்டன.

தங்காலை மகளிர் கல்லூரி மற்றும் தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பெறும் ஒரு மாணவியும், ஒரு மாணவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததையடுத்தே இப்பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதேநேரம் சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவும், டெங்கு ஒழிப்பு பிரிவும் இணைந்து தங்காலை பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளையும் துரிதப்படுத்தினர்.

‘டெங்கு காய்ச்சல் பரவுகை கட்டுப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள உத்தரவாதத்திற்கு அமைய இந்த எட்டுப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவ தாகவும் தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *