மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

ரத் தோட்டை பல்லேதென தோட்டத்தைச் செர்ந்த 14 வயது பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரத்தோட்டை பொலிஸார் சந்தேக நபர்களை தேடிவருகின்றனர். கடந்த 27 ஆம் திகதி புதன்கிழமை இம்மாணவி பாடசாலைக்கு சென்றபோது இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை வீட்டிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டு விடப்பட்டார்.

இதேவேளை, மாணவி புதன்கிழமை இரவு வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் ரத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். வியாழக்கிழமை காலை வீடு வந்த மாணவியிடம் எங்கே போனாய், என்று கேட்டபோது, தன்னை சிலர் கடத்தியதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் கூறினார்.

கடத்தியவர்களையும் தெரியாது எனவும் எங்கே கடத்திச்சென்றனர் என்றும் தெரியாது என்றும் மாணவி தெரிவித்தார். மனநிலை பாதிக்கப்பட்ட இம் மாணவி முதலில் ரத்தோட்டை ஆஸ்பத்திரியல் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தளை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இம்மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதில் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இவரின் தாயார் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி புரிந்துவருகிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *