மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் பாடசாலை சென்றிருந்த மாணவியொருவர் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சததையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு சர்வ மத சமாதான ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் 6 வயது மாணவியொருவர் சில வாரங்களுக்கு முன்பு கடத்தப்டட்டு படுகொலை செய்யப்பட சம்பவத்தையும் சுட்டிக் காட்டி சர்வமத சமாதான ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான சதீஸ்குமார் தினுஷிக்கா மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.