இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த சர்வதேசம் தலையிட்டே ஆகவேண்டும்! ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு இது.

unp.jpgஇலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிட்டே ஆகவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அரசால் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவி கேட்க முடியுமென்றால் ஏன் அந்நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ முடியாது என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஒருசில நாள்களாக சர்வதேசத்தின் மீது இலங்கை அரசு கடுமையாகப் பாய்ந்துகொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கெதிராக கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. தேசியப் பிரச்சினை சர்வதேச மயமாகிவிட்டது
அரசின் அனுசரணையுடன்தான் இது செயற்படுகின்றது. இது அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் ஒன்றாக இருக்கலாம். இலங்கை விடயம் தொடர்பாக எந்த நாடும் கருத்துத் தெரிவிக்க முடியாது. அப்படித் தெரிவித்தால் அந்நாடு துரோகி நாடாகிவிடுகிறது.

எமது தேசியப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியதால்தான் சர்வதேச நாடுகள் இதில் தலையிடுகின்றன. இப்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷதான். எமது பிரச்சினையை எமது நாட்டு மக்களான தமிழ் மக்களுடன் பேசித் தீர்ப்போம் என்று எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதை மஹிந்த ராஜபக்ஷ கேட்காது அதை சர்வதேசத்திற்குக் கொண்டுசென்றார்.

வெளிநாடுகளிடம் நிதி உதவி கேட்க முடியுமென்றால் அவர்களது கருத்தை ஏன் செவிமடுக்க முடியாது? 

இப்போது சர்வதேச நாடுகள் எமது பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்தால் அந்நாடுகள் மீது இலங்கை அரசு பாய்கிறது. அந்நாடுகளிடம் இலங்கை அரசால் நிதியுதவி கேட்க முடியும் என்றால் ஏன் அந்நாடுகள் தெரிவிக்கும் கருத்துகளை இலங்கை அரசால் செவிமடுக்கமுடியாது?

சர்வதேச நாடுகளின் கருத்துகளுக்கு இராஜதந்திர அணுகுமுறைகள் மூலம்தான் பதிலளிக்க வேண்டும். வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி அந்நாடுகளை விமர்சிப்பது சரியில்லை. யுத்தம் தொடங்கப்பட்டது முதல் இப்போதுவரை இலங்கையில் ஜனநாயகம் அழிந்துகொண்டு வருகிறது. இப்போது யுத்தம் முடிவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் இங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் உதவவேண்டும். அதற்கான வேண்டுகோளை நாம் விடுக்கின்றோம்  என்றார்.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • msri
    msri

    நாட்டில் ஐனநாயகத்திற்காக போராட முடியாமல்>பிரதான எதிர்க்கட்சியே சர்வதேசத்தின் உதவியைக் கேட்கின்றதென்றால்! மகிந்த பேரினவாதத்தின் பாசிச சரவாதிகாரத் திமிர்ப்போக்கின் செயறபாடே காரணம்!

    Reply
  • Anonymous
    Anonymous

    At last the pro Imperialist UNP stooges are highly exposed by thier pro-Imperialist and pro -Western baised political stand.They are the culprits who have led the genocide aginst the Tamil people in 1983.Particularly they are the cluprists behind all the riots against the Tamil people.The same people now wanted to serve the Imperialism in favour of the Mafia LTTE.

    Reply