தெற்கு பெய்ரூட் மீது தாக்குதல் – நால்வர் பலி !

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால் நேற்று நடத்தப்பட்ட 13 வான்வழித்தாக்குதல்களில், இந்த தாக்குதலும் ஒன்றென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *