நுவரெலியா கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் மலையக இடதுசாரிகளின் மே தின விழா

may-day.jpgமலையக சோசலிச சக்திகளினதும் இடது சாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் மேதின விழா மே முதலாந் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா கூட்டுறவு சங்க விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

இடதுசாரிகளின் இம் மேதின விழாவிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி தோழர் ஏ.பி.கணபதிப்பிள்ளை தலைமை வகிப்பார். இவ்விழாவில் செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா, ஐக்கிய தொழிலாளர் சங்க நிர்வாகச் செயலாளர் எஸ்.ஜோதிவேல், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம், மகளிர் அமைப்புத் தலைவி மேனகா கந்தசாமி சத்தியம், ஆசிரியர் கலாபூஷணம் இல நாகலிங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஜீ.வி.டி.திலகசிரி, ஐக்கிய சேவையாளர் சங்க பிரதேச தலைவர் கே.நவரட்ணம் கலைமணி பசறையூர் க.வேலாயுதம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *