மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேத்துப்பட்டு அம்பேத்கார் திடலில் தெருமுனை கூட்டம் நடந்தது. இதில் பேச்சாளர் சிங்கை அம்புஜம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தி.மு.க.வை தாக்கி ஆவேசமாக பேசினார். தலைவர்களையும் விமர்சித்து பேசினார். இதை கேட்டுக்கொண்டிருந்த தி.மு.க. தொண்டர் விஜய ஜம்பு திடீரென ஆவேசம் அடைந்து செருப்பை கழற்றி வீசினார். அந்த செருப்பு பேச்சாளர் மீது விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய வரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தன்ர். உடனே போலீசார் விஜயஜம்புவை கைது செய்தனர்.