விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் விளையாட்டு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. அவரை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முழுமூச்சில் எடுக்கப்படுகின்றன. விரைவில் அவர் பிடிக்கப்பட்டுவிடுவார் என நம்புகின்றோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்படித் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான சி.என்.என்னுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே ஜனாதிபதி இப்படிக்கூறியுள்ளார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்க நேரிடும் அதன் பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் ஜனாதிபதி பேட்டியில் ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.
எமது அரசாங்கம் போர்நிறுத்தம் எதனையும் அறிவிக்கவில்லை இப்போது பிரபாகரனைப் பற்றியோ அல்லது வேறு எவரைப் பற்றியோ கவலைப்படவில்லை அது பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கருதுகிறேன் என்றார் ஜனாதிபதி.