வன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் பொது மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்கவென 20 இலட்சம் ரூபாவை இலங்கை அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்க இலங்கையிலுள்ள சீன தூதரகம் முன்வந்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் யங் க்ஸியுபிங் இவ்விடயம் தொடர்பாக வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். குறுகிய காலப் பகுதிக்குள் எதிர்பாராத அளவுக்கு பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்து வந்திருப்பதனால் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக கடந்த 23 ஆம் திகதி இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு அமைச்சர் போகொல்லாகம அளித்த விளக்கத்தில் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த அன்பளிப்பை வழங்க முன்வந்ததாக சீன தூதுவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அன்பளிப்பானது அரசாங்கத்தின் நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்குமென்று நம்புவதாகவும் சீன தூதுவர் யங் க்ஸியுபிங் தெரிவித்திருக்கிறார்
Kusumpan
அவசர நிவாரணம் அகதிகளுக்கா அன்றி ஆயுதம் வாங்குதலுக்கா? அன்றி அரச அதிபரின் பொக்கற்றுக்குள்ளா?