வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 250 ஐ தாண்டியது!

கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 251-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும்.

சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.

மாநில மக்களிடத்தில் உணர்ச்சிமிகு அழைப்பு விடுத்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், 2018 வெள்ளப் பேரழிவின் பின்னர் காட்டிய ஒருமைப்பாட்டை மீண்டும் பயன்படுத்தி, வாழ்வாதாரங்களை புனரமைக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டார்.

நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளின் தீவிரத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளிக்கும் ஆதரவை வலியுறுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 வெள்ளங்களை நினைவுகூர்ந்து, பொதுமக்களும், நிர்வாகமும் இணைந்து செயல்பட்டதில் கிடைத்த சாதனையை மீண்டும் பெறும் நோக்குடன், கேரள முதல்வர் விஜயன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *