தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியது தாய்லாந்து!

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை தாய்லாந்து அரசு நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகின்றது.

இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் அரசின் குறித்த அறிவிப்பை அடுத்து தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்.ஜி.பிடி சமூகத்தினர் ஒன்று கூடி வானவில் கொடியைக் காற்றில் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *