போருக்கான அமைச்சரவையை கலைக்கவுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு !

இஸ்ரேலின் ஆறு பேர் கொண்ட போருக்கான அமைச்சரவையைக்  கலைக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக்  கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) வெளியேறிய நிலையில் நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் இடாமர் பென்-கிர், (Itamar Ben-Gvir) நிதிஅமைச்சர்  பெசாலால் ஸ்மொட்ரிச் (Bezalel Smotrich) ஆகியோரை போருக்கான அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என தேசியவாத மற்றும் மதம் சார்ந்த கூட்டணி கட்சிகள், வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *