ஈழத்தமிழ் ஆண் காடையர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை!

பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு கௌரவம்! பிரபாகரனைக் காதலித்தவளுக்கு நடுத்தெருவில் அறை!! ஈழத்தமிழ் ஆண் காடையர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை!!!

மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கணேசலிங்கம் பேராசிரியர் தமிழ் தேசியத் தூண்! பிரபாகரனை காதலித்த கொழும்புப் பெண் ‘கொழும்பு வேசை’ நடுத்தெருவில் வைத்து புலிப்படை கொண்டு தாக்குவார்கள் அதனை நியாயப்படுத்த மனித உரிமை வீரர்கள் கொடுக்குக் கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்ககள்.

சுஜூகூல் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் பிரபல்யமான ஜூலியட் சுரேஸ், குறுகிய காலம் கிளிநொச்சி பரந்தனில் வாழ்ந்த பெருமாள்சிங்கராயரின் மகளாவார். ஈழத் தமிழ் சமூகம் பேசுகின்ற தமிழ் தேசியத்தின் முதகெலும்பாக இன்னும் இருக்கும் யாழ் மையவாதம், ஏனைய பிரதேசத்தவர் மீதான காழ்ப்புணர்வு, மலையகத் தமிழர் மீதான காழ்ப்புணர்வு, சாதிய வன்மம், பெண்ணடிமைத்தனச் சிந்தனை அனைத்தும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டதே ஏப்ரல் 3 இரவு ஏழுமணியளவில் இடம்பெற்ற சுஜூகூல் என்ற இரு குழந்தைகளின் தாயின் மீதான தாக்குதல். தன்னை ஆண்டாளின் பாணியில் பிரபாகரனைத் தன் காதலனாகக் கற்பனை செய்யும் ஒரு பெண் சுஜூகூல்.

அது மட்டுமல்லமால் சுஜூகூலையும் அவரது ஒன்பதே வயதான மகளையும் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று சிஎம் கழுகுவேட்டை என்ற நிக்சன் – அக்காகடை பாலமுரளி தலைமையிலான கும்பல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் இருந்தனர். அவரது ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தவும் முயன்றுள்ளனர். தனக்கு மாதவிடாய் என்று குறிப்பிட்ட போதும் இந்தக் காமுகர்கள் விடவில்லை.

இராணுவக் காடையர்கள் சிலர் இறுதி யுத்தத்தில் இசைப்பிரியாவை கொடுமைப்படுத்தியதும் புங்குடுதீவில் வித்தியாவை ஈழத்துக் காடையர்கள் காமுகர்களை தொலைபேசியில் கூவி அழைத்து கொடுமைப்படுத்தியதும் அவ்வளவு இலகுவில் மறக்கக் கூடியதல்ல. இதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே பாரிஸில் உள்ள சிஎம் கழுகுவேட்டை நிக்ஸன் – பாலமுரளி கும்பல் சுஜூகூல் பொதுவெளியில் பாலியல் ரீதியில் அவமானப்படுத்துவதற்கு தாக்குதலை நடத்துவதற்கு பாரிஸில் வாழும் காமுகர்களை எல்லாம் ரிக்ரொக் வலைத்தளத்தினூடாகக் கூவி அழைத்தனர். இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமைகளை இராணுவக் காடையர்கள் ஒளிப்பதிவு செய்தது போல் ஒன்பது வரையான லாச்சப்பல் காடையர்கள் இந்தக் காட்சிகளை live stream செய்ய, இன்னும் இருபது பேர்வரையான காடையர்கள் புலிகளின் பெயரில் பிரபாகரனின் பெயரில் சுஜூகூலைத் தாக்கினர். புலிப்பாடல்களைப் போட்டு தாக்குதலைக் கொண்டாடினர்.

இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இதன் பின்னணி என்ன? என்று தெரிந்துகொள்ளவே விரும்பாதவர்கள் இதனை நியாயப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் புலித் தேசியத்தையும் வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அரசியல் செய்பவர்கள், கானொலி செய்து தங்கள் வியூக்களை கூட்டத் துடிப்பவர்கள், ஐபிசி பாஸ்கரன் அடியான்கள், ஹொட்டலியர்களின் அடியான்கள் எல்லோரும் சேர்ந்து தன்னந்தனியாக நின்ற இரு குழந்தைகளின் தாயை நடுத்தெருவில் வைத்து தாக்கியவர்களுக்கும் அவளின் ஒன்பது வயதுக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்று துடித்தவர்களுக்கும் வக்காலத்து வாங்கி செய்திகளை, நேர்காணல்களை, பதிவுகளை இட்டனர்.
இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் யாழ் சைவ வேளாள ஆண்கள் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் போது கண்டுகொள்வதில்லை. லண்டனில் பல பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற போது பாலியல் துஸ்பிரயோகம் செய்த காமுகர்களுக்கு வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயத் தலைவர் உட்பட 42 பேர் நற்சான்றிதழ் வழங்கினர். மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செய்த தமிழ் தேசியத்தின் தூணாகத் தன்னைக் காட்டும் அரசியல்துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் இன்றும் பேராசிரியர். இவ்வாறான காமுகர்களின் உதவியோடு துறைத் தலைவரான ரகுராம் இன்றும் அந்தப்புரத்துக்கு ஆள் பிடிக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அவரின் பாசறையில் வளர்ந்தவர்களையும் கேவலப்படுத்தும் யாரையும் யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆனால் ஒரு அபலைப் பெண் தன்னையும் தன் குடும்பத்தினரையும் தூசண வார்த்தைகளால் திட்டியதற்குப் பதிலடியாக தூசண வார்த்தைகளால் திட்டியதும் யாழ் சைவ வேளாள ஆண்களின் ஆண்மை பீறிட்டுக் கொண்டது. உடனே அவள் பேசிய சொற்களை வெட்டி ஒட்டி அதனை அவள் நேசித்த பிரபாகரனுக்கும் ஈழத்துப் பெண்களுக்கும் எதிரானதாக அவற்றை எடிட் செய்து ஒரு கும்பலே அவளுக்கு எதிராக திரண்டெழுந்து உள்ளது. சிங்களத்தி, கொழும்பு ‘வே’ன்னா, வடக்கத்தையாள் மற்றும் தகாத வார்த்தைகளால் பாலியல் வன்புணர்வு செய்யும் இதே கும்பலும் இவர்களுக்கு ஜால்ரா போட்டு விசிலடிப்பவர்களும் தான் தமிழ் மக்களின் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். பிரபாகரன் குடும்பத்தை உயிர்ப்பித்து எழுப்பி வருகின்றனர், தமிழர்களின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

இந்த விசிலடிச்சான் கும்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிச்சினனத்தையும், புலிக்கொடியையும், பிரபாகரனதும் இறந்த தளபதிகளினது படங்களையும் கார்த்திகைப் பூவையும் ஐடியாக வைத்துக்கொண்டே இவ்வளவு அநியாயங்களையும் ஈனத்தனங்களையும் புரிகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் நாளாந்தம் களங்கப்படுவதற்கும் இவர்களைப்போன்றவர்களே பிரதான காரணமாக உள்ளனர். இந்தக் காமுகர்களும் இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் ஈழஅரசியலில் இருந்து அரசியல் நீக்கம் செய்யப்படும் வரை ஈழத்தமிழர்களுக்கு விடிவே இல்லை.

அன்று உண்மையில் என்ன நடந்தது என்ற பதிவு விரைவில் வெளிவரும்…

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment


  • Warning: printf(): Too few arguments in /home/u126436249/domains/thesamnet.co.uk/public_html/wp-content/themes/deus/functions/comments-custom.php on line 29

    Unmaigal note maadhiri losai ketkaathu , poigal sillarai maathiri oosai elimbum nanri 🙏

    Reply