தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம் – சீனா உறுதி !

சீனாவிடம்  இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் தாம் அனுமதிக்க மாட்டோம் என சீன இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை சீன இராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “தைவானை சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல சீன இராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது. தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தைவானின் சுதந்திரத்திற்காக போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகவும், சீனாவுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைவதை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதற்காகவும் சீன இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சியுடன் செயல்பட்டு வருகின்றது.

மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது தைவானை சுற்றி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *