புலிகளிடமிருந்து கை மாறும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி – து.சேனனுடனான கலந்துரையாடல்!

மே மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி நிகழ்வை பிரித்தானியாவில் இயங்கும் இளைய தலைமுறையினர் அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. நியூமோல்டனில் மோல்டன் றோட்டில் உள்ள மனோர் பார்க் ஹோலில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பறைசாற்றி வரும் அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டுக்கொண்டுள்ளது. தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக பறைசாற்றுகின்ற உலகின் பல்வேறு பாகங்களிலும் இயங்கும் அமைப்புகள் படிப்படியாக தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கைவிட்டதால் தமிழ் சொலிடாரிட்டி இந்த முள்ளிவாய்க்கால் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினை கட்டியெழுப்பியவர்களில் ஒருவரும் கொமிற்றி போர் வேர்கஸ் இன்ரநஷனலின் (Committee for Workers International) செயலாளருமாகிய சேனன் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தங்களைப் புலிகளின் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான அமைப்புகளிடம் எந்தவிதமான அரசியல் தெளிவோ அரசியல் திட்டமிடலோ இல்லையெனச் சுட்டிக்காட்டும் சேனன் இவர்கள் காலாவதியாக நீண்டகாலம் ஆகிவிட்டது எனத் தெரிவித்தார். அதனால் நினைவு தினங்களாக ஒரு மரண வீடாக நிகழ்வுகளை நடாத்தி காலத்தை விரயமாக்காமல் இந்த நினைவுகளை மக்களை எழுச்சியடையச் செய்யும் வகையிலும் அதனை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுகின்ற வகையிலும் தமிழ் சொலிடாரிட்டி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதாக சேனன் தெரிவித்தார். அவர் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணல் இதோ..!

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *