காசா நகரின் தென்மேற்கில் உணவு உதவிக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா சுகாதார அமைச்சகம் வியாழனன்று, குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 750 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியது.
பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் குளிர் இரத்தம் கொண்ட “படுகொலை” என்று தெரிவித்து இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது.
The Ministry of Foreign Affairs and Expatriates// Condemns the massacre in the Nablsi Square in Gaza and calls for an immediate ceasefire as the sole means to protect civilians.#Gaza_under_attack#CeasefireNow#Palestine#Israeliwarcrimes pic.twitter.com/AaoEtAofMC
— State of Palestine – MFA 🇵🇸🇵🇸 (@pmofa) February 29, 2024
இந்த தாக்குதல் இஸ்ரேலின் தற்போதைய “இனப்படுகொலை போரின்” ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் கூறியது.
“பொதுமக்களை பதுகாப்பதற்கான ஒரே வழி” போர்நிறுத்தத்தை உருவாக்க “அவசரமாக தலையிட” சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி இறந்த மற்றும் காயமடைந்த உடல்கள் மீது ஏறியது. காசாவில் பட்டினியின் விளிம்பில் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கான”இது ஒரு படுகொலை, ,” என்று அல்ஜசீரா செய்தியாளர் கூறினார்.
அல்-ஷிஃபா, கமால் அத்வான், அஹ்லி மற்றும் ஜோர்டானிய மருத்துவமனைகளுக்கு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் சாலைகள் “முற்றிலும் அழிக்கப்பட்டதால்” அம்புலன்ஸ்கள் அப்பகுதியை அடைய முடியவில்லை, என தெரிவிக்கப்படுகிறது.