யூ.எஸ். எயிட் பிரதிநிதிகளுடன் அமைச்சர் முரளி சந்திப்பு- கிழக்கு அபிவிருத்தி பற்றி ஆராய்வு

karuna_amman.jpgகிழக்கு மாகாண உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் தொடர்பாக யூ. எஸ். எயிட் நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் முரளிதரன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.

யூ. எஸ். எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி றெபேக்கா மற்றும் இணைப்பாளர்கள் அரசியலமைப்பு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து யூ. எஸ். எயிட் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு விலகியிருக்கும் போராளிகளுக்கும் போரினால் பாதிப்புற்று கணவனை இழந்த தாய்மாருக்கும் புதிய முறையிலுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் மற்றும் கால்நடை அபிவிருத்தி விவசாயம் தொழில்நுட்பக் கல்வி முறைமை தொடர்பாகவும் மட்டக்களப்பு ஆயித்தியமலையிலுள்ள அரிசி ஆலையைப் புனர்நிர்மாணம் செய்து அதை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் மூலம் அதிகமான மக்கள் பயனடைவரெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொக்கட்டிச்சோலை மண்முனை இணைக்கும் பாலம் திட்டத்தினையும் அமைச்சர் முன்வைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *