இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன் – சென்னையில் இரா.சாணக்கியன்

முன்னரான காலப்பகுதியில் ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகவும் அதற்கு தமிழக அரசு உதவியதாகவும், இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன், அந்த ஆயுதம் பொருளாதார ஆதரவே, என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சென்னையில் நேற்றையதினம் (11) ஆரம்பமான 2024ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தமிழக மாநில அரசு செய்த உதவிக்கு சாணக்கியன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நெருக்கடியான நேரத்தில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பியது, பெருமையான தருணம், ஏனெனில் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குமட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களுக்கும் அனுப்பப்பட்டது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை, 1980 களில், ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகம் அதற்கான உதவிகளை தமிழக அரசு வழங்கியது இப்போது தமிழக அரசிடம் நான் ஆயுதம் கேட்கிறேன், பொருளாதார ஆதரவே, அந்த ஆயுதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக தமிழ்நாட்டு அரசிடம் கேட்கும் ஆயுதமே இந்த பொருளாதார வளர்ச்சி. இந்த பொருளாதார வளர்ச்சியை வைத்து ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்க்காலத்தை அமைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *