“தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Thirumalai vasan
போரை நடத்துபவனுடன் தானே பேசவேண்டும்.அம்பை எறிபவனை விட்டு விட்டு அம்புடனும் வில்லுடனும் பேசமுடியுமா?
palli
இதை மகிந்தா சொல்ல வேண்டும். அதுவும் நாராயணனிடம் சொல்ல வேண்டும். இப்படி வெட்டி பேச்சு புலிகள் பேசி திரிந்ததால்தான் இன்று புலிகள் அரசிடம் (இந்திய இலங்கை) தோல்வி கண்டுள்ளனர்.
பார்த்திபன்
இப்ப கூத்தமைப்பினர் அரசோடு பேச மாட்டொமென்று வெளியாலை சொல்லிக் கொண்டே, உள்ளாலே அரசோடு பேசிக் கொண்டிருக்கினம் தானே. இப்படியே பேசலாம் என்று சொல்ல வாறியளோ??