தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

india-elc-2009.jpgஇந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் மொத்தம் 124 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 5 வது கட்டமாக மே 13 ந்தேதி ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை. 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். 25ஆம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம். அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

5வது கட்ட தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு: தமிழ்நாடு 39, உத்தரபிரதேசம் 14 ,மேற்குவங்காளம் 11, பஞ்சாப் 9, உத்தரகாண்ட் 5, இமாச்சலபிரதேசம் 4, காஷ்மீர் 2, புதுச்சேரி 1, சண்டிகார் 1, மொத்தம் 86

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *