மொனராகலை மாவட்டத்திலுள்ள கல்டெம் எரா கிராமததில் நேற்றிரவு ஆயுதக் குழுவொன்றினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராமவாசிகள் புத்தாண்டுப் பண்டிகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அங்கு நுழைந்த ஆயுதக் குழுவொன்று இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் கூறுகின்றனர். ஏற்கனவே இந்தப் பகுதியிலுள்ள மஹாகொடயாய என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற இதே பாணியிலான சம்பவமொன்றில் 9 கிராமவாசிகள் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைதிருந்தும் இருந்தார்
இந்தச் சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலத்திற்குள் நேற்றைய சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு தாக்குதல்களும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற் கொண்டுள்ளனர்.