அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கிழக்கில் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இன்று வவுனியா அரச அதிபரிடம் கையளிப்பு

cm.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர்உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஒரு தொகுதியை இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா அரச அதிபர் ஊடாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கையளிக்கவிருக்கிறார்.

இதற்காக வவுனியா சென்றுள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வவுனியா மாவட்டச் செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திப்பதுடன் நலன்புரி முகாமுக்கும் விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களைக் கையளிப்பார் என்று முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கையளிக்கப்படவிருக்கும் முதலாவது தொகுதி உலர்உணவு நிவாரணம் சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியானது. இடம்பெயர்ந்து வரும் வன்னி மக்களுக்கு வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அமைப்புகள், ரி.எம். வி.பி. கிளைகள் மூலம் முதலமைச்சரின் வழிகாட்டலில் உலர் உணவுப்பொருட்கள் வீடுவீடாகச்சென்று சேகரிக்கப்பட்டு வந்தன. அவற்றின் ஒரு தொகுதியே இன்று வவுனியாவில் கையளிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோர்ட் முன் தீக்குளிக்க காங். வக்கீல் முயற்சி

 நாகர்கோவில் கோர்ட் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வக்கீல் ஒருவர் முயன்றதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோர்ட் வாளகத்தின் முன் வக்கீல் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஒன்றுடன் வந்தார்.

பின்னர் அவர் இலங்கை தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் கோசல்ராம் என்றும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரிய வந்தது

விசுவமடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா 500 பொதுமக்கள் கொல்லப்பட்ட போது கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- செல்வம் அடைக்கலநாதன்

selvam.jpgசிறி லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மை நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாது. அத்துடன் அப்பிரதேசத்தில் போர் தீவிரமாக நடைபெறுகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்பும் கூறுகின்ற கதைகளை கேட்டு எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று விடுதலைப் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்து கண்டனம் தெரிவித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் வாழும் அகதிகள் தொடர்பான முழு விபரங்களும் வெளியிடப்படவேண்டும்:ஆனந்த சங்கரி

sangari.jpgஇடம் பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பான முழு விபரங்களையும் வெளியிடுவதன் மூலம் அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து உயிரை பயணம் வைத்து தப்பி ஓடி வவுனியா பிரதேசத்துக்குள் வந்துள்ள இடம் பெயர்ந்த மக்களைப் பற்றிய அறிய மிக ஆவலாக அவர்களின் உறவினர்கள் பிற நாடுகளிலிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் நேற்றும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதையும். அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகின்றனர். அப்பாவி மக்களை விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புக்களாகிய ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்கா கனடா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடோ, தமிழ் தேசிய கூட்டணியினரோ விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்காதது துரதர்pஷ்டமே. அதைவிடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது.

நான் தங்களிடம் மூன்று கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் யார் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளார்களோ அவர்களின் பெயர் விபரம், தற்போது தங்க வைக்கப்பட்டள்ள இடம் போன்ற விபரம் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.

இரண்டாவதாக, வந்துள்ளவர்களில் முதியோர், சிறு பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோரை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் ஏற்பார்களேயானால் அவர்களை அனுமதிப்பதோடு எஞ்சியவர்களை உரிய விசாரணையின் பின் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கலாம். எனது வேண்டுகோள்களுக்கு ஆதரவாக இரு சம்பவங்களை குறிப்பிட விரும்புகின்றேன். எனக்குத் தெரிந்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் இரு கால்களும் அற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் நினைவிழந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் பற்றிய செய்தி எதுவும் தெரியாத நிலை உறவினரை தேடித் தருமாறு என்னைத் தொந்தரவு செய்கின்றனர். மற்றுமோர் சம்பவத்தில் ஓர் பெண்மணி ஒரு காலில் படுகாயப்பட்டு அவரின் தாயார் அவரை மன்னார் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கின்றார். மறுநாள் வவுனியா வந்த அவர் கணவர் வவுனியா வைத்தியசாலையில் தன் மகன் ஒருவரை பராமரிக்கின்றார். இவர்களை அவர்களின் உறவுக்காரர்கள் அவர்களை தம்முடன் தம் வீட்டில் வைத்திருக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.

எனது மூன்றாவது வேண்டுகோள் உள்ளுர் பொது அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், கிராம முன்னேற்ற சங்கங்கள், சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களை அகதிகள் சந்தித்து உதவ அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிப்பதால் விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அவர்களின் பொய்ப்பிரச்சாரம் இளைஞர்களை மற்றவர் அறியாத இடத்துக்கு மாற்றப்படுவதாகவும், பெண்கள் காணாமல் போகிறார்கள் என்றும் பொது மக்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்றும் வழங்கப்படும் உணவின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் இதுபோன்ற இன்னும் பலவாகும். நாளுக்குநாள் முகாமுக்குள் வந்து சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய தொண்டர்களின் உதவி மிக பிரயோசனமானதாக இருக்கும்

பாக்கு நீரிணையில் இந்திய போர்க் கப்பல்கள்!

boats-1002-2.jpgஇலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் வேளையில் இராமேஸ்வரம் கடல்பகுதியில் புலிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் விமானப்படையினரின் போர் விமானங்களும் போர்க்கப்பலும் தீவிர கண்காணிபபில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செயதிகள் தெரிவிக்கின்றன.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவலாம் எனக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் கடல் பகுதியின் மாவட்டக் கடலோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500 க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றன.

இராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம் ஆகிய பாககு நீரிணை  கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான் போர்க்கப்பல்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளன

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் படைக்குசொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை ஹெலிகொப்டர்  இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாகப் பறந்து கண்காணித்து வருகிறது மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் நீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐசி 181 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன

கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள் படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூப்பிரிவு பொலிஸார் கடலோரப்பகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பிவருகிறார்களா இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்து விசாரணை நடத்திவருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வருடங்களில் யாழ். குடாநாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் – டக்ளஸ்

epdp.jpgயாழ். குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் ஆரம்பித்து வைத்துவிட்டு வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கவிருப்பதால் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் தங்களது முழுமையான பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்களை அண்மையில் சந்தித்து சமூக மட்டத்திலான பல்வேறு வேலைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது, எம்மக்களின் நலன்சார்ந்து உழைப்பதற்கு எமக்குக் கிடைத்த பல்வேறு அரிய சந்தர்ப்பங்களை தமிழ்த் தரப்பு அரசியல் தலைவர்களும், ஆயுதமேந்திய இயக்கங்களும் ஒழுங்குற பயன்படுத்தத் தவறியதால், இன்று எம்மக்களுக்கு இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி மேலும் நாம் இந்த வரலாற்றுத் தவறுகளை செய்யக் கூடாது. நொந்து, நொடிந்து போயிருக்கும் எமது சமூகத்தை தூக்கி நிறுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும்.

தத்தமது தனிப்பட்ட வளர்ச்சியினை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல், அனைவரும் எமது சமூக மேம்பாடு கருதி சிந்தித்து செயற்பட முன்வர வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர், சுமார் இரண்டு தசாப்த காலத்திற்கும் மேல் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும் இயற்கை காரணமாகவும் ஏற்பட்டுள்ள அழிவுகளை இருவருட காலத்திற்குள் மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இதற்கு அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்புகள் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின்போது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய வேலைத் திட்டங்கள் போன்றவை தொடர்பிலான திட்ட அறிக்கைகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, இவற்றில் அடங்கியிருக்கும் விடயங்கள் குறித்து மீளக் கலந்துரையாடி உரிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

“ரிவிர’ ஆசிரியர் தாக்குதல்; தகவல் வழங்கினால் ரூபா 10 இலட்சம் சன்மானம்

rivira-editor-02.jpg“ரிவிர’  பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோனை தாக்கியவர்கள் தொடர்பாக தகவல் வழங்குவோருக்கு ரூபா 10 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

சிலவாரங்களுக்கு முன்னர் “ரிவிர’ ஆசிரியர் தென்னக்கோன் கடுமையாக தாக்கப்பட்டார். இவரை தாக்கியவர்களை கைது செய்ய முடியவில்லை என்று பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஆயினும் உபாலி தென்னக்கோனின் மனைவி தெரிவித்த தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரென நம்பப் படும் ஒருவரின் உருவப்பட மாதிரியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு ஜனவரி 25 இல் உபாலி தென்னக்கோனும் அவரது மனைவியும் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறை

mahinda_samarasinghe.jpgபுலிகளின் பிடியிலிருந்து விடுபட்டுப் பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறையை பாதுகாப்புப் படையினர் அமுல் படுத்தவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு பாதுகாப்பை நாடி வரும் அப்பாவி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பாதுகாப்பை நாடி மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  விசுவமடு, சுதந்திரப் பிரதேசத்தை நோக்கி வந்த சிவிலியன்களை இலக்கு வைத்து புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி நேற்றுக்காலை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கினர்.  சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த சில நாட்களுக்குள் வந்துள்ளனர். நேற்றும் ஐயாயிரம் பொது மக்கள் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியை நோக்கி படகுகள் மூலம் 2 ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர் என்று யாழ். அரச அதிபர் தனக்கு தகவல் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பை நாடி எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான சகல நிவாரண நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

தற்பொழுது படுதோல்வியடைந்துள்ள புலிகள், இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிவிலியன்களே புலிகளை பாதுகாத்துக் கொள்ளவுள்ள ஒரே ஒரு ஆயுதமாகும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நாடி வருவதையிட்டு விரக்தியடைந்த புலிகள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிவரும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பை நாடி வந்த ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம்.
இந்த மக்களை தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம். இந்த மக்களை தங்க வைக்கவென மேலும் 5 நலன்புரி நிலையங்களை அமைக்க வவுனியா அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

72 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்த்து கனடிய தமிழர் சாதனை

suresh.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான சுரேஷ் ஜோக்கிம் (39 வயது) என்பவர் 72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  சுரேஷ் ஏற்கனவே 52 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2005 இல் நியூயோர்க்கில் ஏபிசி ஸ்ரூடியோவில் 69 மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து சாதனை படைத்திருந்தார். இப்போது ஸ்ரொக்ஹோமில் 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார்.

கின்னஸ் ஏட்டில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ள சுரேஷ் ஜோக்கிமை சுவீடனின் தொலைக்காட்சி சேவையான ரிவி4 நிலையம் சுவீடனைச் சேர்ந்தவருடன் போட்டியிடுமாறு அழைத்திருந்தது. அதற்கிணங்கி அங்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ஜோக்கிம் சாதனை புரிந்துள்ளார்.  ரொறன்ரோவில் மிஸ்ஸிசாகுவா பகுதியில் தனது மனைவியுடன் சுரேஷ் வாழ்ந்து வருகிறார். கோப்பி குடித்தவாறு தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்ப்பதில் தனது நேரத்தை செலவிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியை பார்க்கும் போட்டியை ஆரம்பித்த அவர் ஞாயிறு மாலையே பார்ப்பதை நிறுத்தியுள்ளார். தனது சாதனையை முறியடிக்க கடந்த 3 வருடங்களாகப் பலர் முயன்றதாகவும் ஆயினும் முடியவில்லை என்று ஜோக்கிம் கூறியுள்ளார்.

25 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களில் மரதன், 120 மணிநேரம் வானொலி ஒலிபரப்பு, ஒற்றைக்காலில் 76 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள், 55 மணித்தியாலங்கள் 5 நிமிடங்கள் உடுப்புகளை இஸ்திரிகை செய்தமை என்பன இவரின் சாதனைகளில் முக்கியமானவையாகும்.  தொடர்ச்சியாக 84 மணித்தியாலங்கள் மேளம் அடித்தமை, 168 மணித்தியாலங்கள் ரெட்மில்லில் (659.27 கிலோமீற்றர் தூரம்) ஓடியமை, 4.5 கிலோகிராம் எடை கொண்ட 135.5 கிலோ மீற்றர் தூரம் காவிச் சென்றமை, 56.62 கி.மீ.தூரம் தொடர்ந்து தவழ்ந்தமை, 100 மணித்தியாலங்கள் நடனமாடியமை, 24 மணித்தியாலயத்தில் 19.2 கி.மீ.தூரம் காரை தள்ளிச் சென்றமை என்பனவும் ஜோக்கிமின் சாதனைகளாகும்.

கடற்புலிகளின் பாரிய தளம் முல்லை காட்டுப் பகுதியில் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத் தீவு காட்டுப் பகுதியில் மறைவான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரிய தளம் மற்றும் கட்டடத் தொகுதி என்பனவற்றை நேற்றுக் காலை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படையினரின் இந்த கடுமையான தாக்குதல்களில் கடற் புலிகளின் பாரிய கட்டடத் தொகுதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலேரிக்கு வடக்கேயும், வெள்ளைமுல்லை வாய்க்கால் காட்டுப் பகுதியின் கரை யோரத்திற்கு மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவிலும் இந்த முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் மற்றும் மிக் – 27 ரக தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக்காலை 7.00 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.