அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எண்ணெய் இறக்குமதி உரிமை நிதியமைச்சு வசமே இருக்கின்றது – அமைச்சர் பௌஸி

parliament.jpgஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் இறக்குமதி உரிமையானது இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது என்று பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.

அமைச்சர் இவ்வாறு தெரிவிக்கையில், ஜே.வி.யின் பின்வரிசை எம்.பி.யான ரணவீரபத்திரன பௌசி பாவம் என்றார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

எரிபொருள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் ரத்து உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில் பெற்றோல் விலைகுறைப்பு தொடர்பான உத்தரவு மட்டும் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. எனினும் ஏனைய உத்தரவுகளின் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து நிதியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

எனினும் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகள் பின்னர் அந்த நீதிமன்றத்தாலேயே ரத்து செய்யப்பட்டன. இதன் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை மீண்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் வந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் நடைபெற்று விட்டதா என அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பௌசி, இல்லை இல்லை அது (எண்ணெய் இறக்குமதி உரிமை) இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது. நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவு இன்னும் நடைமுறையில் இருக்கின்றது என்றார்.

ஆனால், ஆயுதங்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொள்வனவை விட பாரிய வியாபாரமான எண்ணெய் இறக்குமதியை நிதி அமைச்சு உங்களிடமிருந்து கைப்பற்றியுள்ளது என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இதன்போது பௌசி பாவம் என்று ரணவீர பத்திரன தெரிவித்தார்.

கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை என்கிறார் கரு ஜெயசூரிய

unp-members.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மேலதிகமாக சிரேஸ்ட தலைமைப் பதவியொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கும் அதேவேளை, கட்சியின் சிரேஸ்ட தலைவராக பிறிதொருவர் நியமிக்கப்படவுள்ளார்.  குறித்த இரண்டு பதவிகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து கட்சியின் எட்டு சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆய்வு நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

சிரேஸ்ட உறுப்பினர்களின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கட்சியின் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதேவேளை எதிர்காலத்தில் கட்சிப் பதவிகளுக்காக போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பல கட்சிகளில் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளதாகவும், பதவி மோகம் எதுவும் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் காணப்படும் முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி சோளத்துக்கு 35 வீதம் செஸ் வரி

இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் சோளத்திற்கும் 35 சதவீதப்படி செஸ்வரி விதிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.உள்ளூர் சோளச் செய்கையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த இந்த செஸ் வரி யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த செஸ் வரி நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நெல்லுக்கு அடுத்த படியான உணவுத் தானியமாக சோளம் அரசாங்கத்தினால் கடந்த வருடம் விரிவான அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்டது. இதன் பயனாக 2008 ஆம் ஆண்டில் 52 ஆயிரத்து 353 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டது. இவற்றின் மூலம் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 243 மெற்றிக் தொன் சோளம் அறுவடை செய்யப்பட்டது.

கடந்த வருடம் சோளச் செய்கை அதிகரித்ததுடன் அறுவடையும் அதிகரித்தது. இதனால் சோள இறக்குமதி பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. 2005 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 846 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட சோளம் 2008 ஆம் ஆண்டில் 82 ஆயிரத்து 490 மெற்றிக் தொன்னாக வீழ்ச்சி அடைந்தது. இதன் பலனாக அந்நிய செலாவணியும் மீதமாகியுள்ளது.

2008/2009 பெரும் போகத்தில் 65 ஆயிரத்து 850 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் இப்போதைக்கு 60 ஆயிரத்து 582 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து இருநூறு மெற்றிக் தொன் சோளம் அறுவடையாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் உலக சந்தையில் சோளத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சோள இறக்குமதிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகி ன்றன. இதனால் உள்ளூர் சோளச் செய்கையா ளர்கள் பாதிக்கப்பட இடமளிக்கக் கூடாது என் பதற்காகவே இந்த செஸ் வரி அறிமுகப்படுத் தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வர தீர் மானிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும்:- கயந்த கருணாதிலக்க

gayantha.jpgமேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய பொருளாதாரச் சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க மஹிந்த சிந்தனை கொள்கைகளினால் முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 54 ரூபா எனவும், மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 64 ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஒரு கிலோ சீனியின் விலை 75 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுவதனை தடுக்க முடியாதென அவர் எதிர்வு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தல்களை இலக்காக வைத்தே பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி வருவதாகவும் மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பொருட்களின் விலை ஏற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

.

மேல் மாகாணத்தில் மீண்டும் பொலிஸ் பதிவு ! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

ranjeth-gunasekara.jpgகடந்த ஐந்து வருடத்துக்குள் மேல் மாகாணத்தில் வந்து குடியேறியுள்ளவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சனி,ஞாயிறு (21,22,)  ஆகிய தினங்களில் மீண்டும் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர்  மேலும் கூறியதாவது,

வடக்கில் தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகள் தெற்கில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மீலாத் விழாவின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பாணியில் மேலும் பல தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்குத் தேவை. எனவே பொது மக்கள் எப்போதும் விழ்ப்புடன் இருக்கவேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் குடியேறியவர்களும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தம்மைப் பதிவு செய்து கௌள வேண்டும். மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் வேறு பொது நிலையங்களிலும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் பொலிஸார் மேறn;காண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரவித்தார். 

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு- படைத்தரப்பு

army-s-l.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.

55, 58 மற்றும் 8ஆவது விஷேட படையணியினரே இந்த தீவிர முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு மற்றும் சாலை தெற்குப் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.  இதில் இருதரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கினறது

2 மகள்களை 10 வருடமாக கற்பழித்த காமவெறி தந்தை கைது

19-father.jpgநெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.  இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது. அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம். தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான். தற்போது போலீஸார் அந்த கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மகளுடன் கூடா உறுவுகொண்ட தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஆஸ்டிரியாவில் தன் சொந்தப் புதல்வியுடன் தகாத உறவு கொண்டு அவரை இருபது ஆண்டுகளுக்கும் மேல் பூட்டிவைத்து, அவர் மூலம் 7 குழந்தைகளப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோசப் பிரிட்சில் என்ற ஆஸ்டிரிய குடிமகன் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்த திடிர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று நீதிபதி கேட்டபோது, வீடியோ ஒலிபதிவில் தனது புதல்வியின் சாட்சியத்தை தாம் கேட்டமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்சில்லுக்கு தற்போது வயது 73. இவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம். குடும்பத்துக்குள் கூடா உறவு மற்றும் கற்பழிப்பு, தவறாக தடுத்து வைத்தல் ஆகிய குற்றங்களை ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த பிரிட்சில் புதல்வியை அடிமைப் படுத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்துவந்தார். மகளுக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றை, அது பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே கொலை செய்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்து வந்தார்.

TMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சபையாக மாற்றம்

slfp-tmvp.jpgTMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று (மார். 18) முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சபையின் தவிசாளரான எஸ். பாக்கியராசா, உப தவிசாளருடன் மேலும் மூன்று ரி. எம். வி. பி. உறுப் பினர்களும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஒன்பது உறுப்பினர்களில் 6 பேர் ரி. எம். வி. பி. கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் தொடர்ந்தும் அக் கட்சியிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சிக்கு மாறிய உறுப்பினர்கள் அக் கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் வரும் இரண்டாவது பிரதேச சபை இதுவாகும். ஏற்கனவே, ஓட்டமாவடி பிரதேச சபை இக்கட்சியின் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

55வது படையணியின் கட்டுப்பாட்டுக்குள் பட்டிக்கரை பிரதேசம்.

safe_zone.jpgசாலைப் பிரதேசத்துக்கு தெற்காக 55வது படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடந்த மார்ச் 17ம் திகதி நடந்த கடும் மோதலைத் தொடர்ந்து பட்டிக்கரைப் பகுதியில் தமது முழுக்கட்டுப்பாட்டை 55வது டிவிசன் கொண்டு வந்துள்ளனர். இதே வேளை இப்பகுதிக்கு தெற்காக புலிகள் அமைத்திருந்த பாரிய மண் அணைக்கட்டை படையினர் கைப்பற்றி புலிகளுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பட்டிக்கரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் சினைப்பர் தாக்குதலில் 8 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது

திருமலை சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் வரதராஜா ஜனார்த்தனன் சயனைட் அருந்தி தற்கொலை

Regie_Varsaஜூட் ரெஜி வர்ஷா (வயது 6 ) என்ற சிறுமியை கடத்தி பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார். ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து பொலிஸார் இவரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கபப்ட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

இச்சிறுமியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைதான போதிலும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார். இன்று சயனைட் உட்கொண்ட நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன