அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கல்முனை ஐஸ்வாடியில் ஆயுதங்கள் மீட்பு

gun00.jpgகல்முனை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட ஐஸ்வாடியொன்றிலிருந்து சனிக்கிழமை இரவு ஆயுதங்கள் சில விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்தே கடற்கரையிலுள்ள பழைய ஐஸ்வாடிக்கு இரவு 9.30 மணியளவில் சென்ற படையினர் அங்கிருந்த சில ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது பிஸ்ரல்1, கைக்குண்டு2, ரி.56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள்60, ரவைக்கூடுகள்2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தப் பகுதியில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பசில் ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் புல்மோட்டை அகதிகளை பார்வை

Wanni_War_IDPsஜனாதி பதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ. இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்தனர்.

புல்மோட்டை இலங்கை கனியவள மணல் கூட்டுத்தாபனத்தில் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதி மக்களையும் இவர்கள் பார்வையிட்டனர். அத்துடன் வன்னி அகதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சஹணகம (நிவாரணக்கிராமம்) இடைத்தங்கல் முகாம் வேலைகளையும் பார்வையிட்டனர்.

இந்த முகாமில் இருபதாயிரம் குடும்பங்களை குடியமர்த்துவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பத்தாயிரம் பேரை குடியமர்த்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நலன்புரி நிலையத்தின் வேலைகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் முதலில் 10 ஆயிரம் பேரை இங்கு குடியமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களை வேறுஇடங்களில் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜனாதிபதியின் ஆலோசகர், ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் புல்மோட்டையில் இயங்கும் இந்திய தளவைத்தியசாலைக்கும் சென்று அங்கு சிகிச்சை பெறும் வன்னிமக்களையும் பார்வையிட்டனர்.  இதேவேளை, இந்திய டாக்டர்கள் ஐவர் இங்கிருந்து செல்வதால் புதிய டாக்டர்கள் பொறுப்பேற்றனர்.

டெங்கு பரவுவதைத் தடுக்க தவறியோருக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவுவதனை தடுக்கத் தவறிய ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாத்ததும்பறை சுகாதார உத்தியோகஸ்தர் திருமதி எச். எம். சல்வத்துர ஆராச்சி வத்துகாமம் பகுதியில் இவ்வாறு டெங்கு பரவுவதை தடுக்க தவறியவர்களை அடையாளம் கண்டுள்ளார். பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அண்மைக்காலமாக 21 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடி க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இவர்கள் உதாசீனமாக இருந்துள்ளனர்.

பன்றி இறைச்சி விற்பனை பல பகுதிகளிலும் நிறுத்தம்

mexican.jpgபன்றிக் காய்ச்சல் உலகில் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கையிலும் பன்றி இறைச்சியை உண்பது தவிர்க்கப்பட்டுள்ளது. புத்தளம் கொழும்பு வீதியில் பல இடங்களில் பன்றி இறைச்சி விற்பனையாளர்களை ஞாயிற்றுக்கிழமை காண முடியவில்லை.

சந்தைகளில் பன்றி இறைச்சி விற்பனை நடைபெறவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைகளில் பன்றி இறைச்சி வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வந்தது.  இங்குள்ள உல்லாசப்பயணிகள் ஹோட்டல்களிலும் பன்றி இறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் இப்பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு சுகாதார பகுதி அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.  பன்றிகள் நோய்களுக்கு உள்ளானவையா எனவும் பரிசோதிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமானநிலையத்திலும் வெளிநாட்டு பயணிகள் வரும்போது அவர்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டதா என பரிசோதிக்கப்படுகின்றனர். பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் நிலையான வைப்பிலுள்ள நிதியை எடுக்க அனுமதி பெற வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்கள் நடப்பு வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் நிலையான வைப்பில் இடப்பட்டிருக்கும் நிதியினை மூலதன அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரத்தை உள்ளூராட்சி அமைச்சிடமிருந்து பெற வேண்டுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். தயாபரன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு இவ்விடயம் தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

உள்ளூராட்சி மன்றங்கள் முன்னைய வருடங்களின் நிலையான வைப்புக் கணக்கிலிருந்து பெற்று நடப்பு வருட அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற சட்ட விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவினத் தலைப்பிற்கு மேலதிகமாக செலவு செய்வதாயின் வாக்குப் பணவகை மாற்றத் தின் மூலமே மேற்கொள்ள முடியும். கணக்காய்வு அத்தியட்சகரினால் ஏற்றுக் கொள்ளப்படாத கொடுப்பனவுக்குரிய தொகை அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் முதல்வர்கள், தலைவர்கள் மற்றும் அக் கொடுப்பனவுக்கான தீர்மானத்தை அங்கீகரித்த சபை அங்கத்தவர்கள் ஆகியோரிடமிருந்து அறவிடப்பட வேண்டிவரும்.

வெசாக் வார காலத்தில் ஏனைய மத உற்சவங்கள் நடைபெறக்கூடாது என்பது அரசியலமைப்புக்கு முரணானது – நுவரெலியா இந்து கலாசாரப் பேரவை

sri-lanka-upcountry.jpgபௌத் தர்களின் வெசாக் வாரத்தையொட்டிய காலப்பகுதியில் ஏனைய மதத்தவரின் உற்சவங்கள் நடைபெறக்கூடாதென்ற மனோபாவம் சகல மதங்களையும் பாதுகாத்து சகல மதத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கும் எமது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது.

இனவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதுடன் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’. இவ்வாறு நுவரெலியா இந்துக் கலாசாரப் பேரவையின் தலைவரும், நுவரெலியா மாநகரசபையின் உறுப்பினருமான இரா.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்ற ஒரே மாதிரியான கலாசார வழிபாட்டு முறைகளைக் கொண்ட பௌத்த, இந்து சமய உற்சவங்களின் போது இத்தகைய முரண்பாடு தோன்றியிருப்பது அமைதியை விரும்புகின்ற பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால் முழு நாட்டிற்குமே இது பாரிய பாதிப்புக்கு வழி கோலுவதாக அமையும்.

இவ்வாறு ஒரு மதம் சார்ந்த திருவிழாக்களைத் தடைசெய்து இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் காணப்படும் பரஸ்பர நல்லிணக்கத்திற்குப் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியது.

ஒரு தேசிய பிரச்சினையாகவும் மாறிவிடலாம். இது தொடர்பாக ஜனாதிபதி கலாசார அமைச்சர் தேசிய நல்லிணக்க அமைச்சரும் மதத்தலைவர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் இறக்குவானை நகரின் முக்கியஸ்தர்கள் போன்றோர் கலந்துரையாடி ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆலயத்தின் உற்சவத்தினை எந்தவித தடையுமின்றி நடத்தக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளிடம் தற்போது விமானங்கள் எதுவும் இல்லை; படையினர் தெரிவிப்பு

ltte_.jpgமுல் லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையில் அவர்கள் வசம் விமானங்கள் எதுவுமில்லையென படைத்தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பில் கடற்கரையோரமாக தற்போது புலிகள் 5 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் படையினர் விமானக் குண்டொன்றை கண்டுபிடித்ததாகவும் இது புலிகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தும் ரகத்தைச் சேர்ந்த குண்டெனவும் படைத்தரப்பு கூறியது.

இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட போதும் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்களிடம் விமானங்கள் எதுவும் இருப்பதற்கான சாத்தியங்களில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது.

இதேநேரம், கடந்த மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு முதலியார்குளம் பகுதியில் நடைபெற்ற தேடுதலின் போது புலிகளின் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எட்டுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் இலகுரக விமானமொன்றை வைத்திருக்கும் சாத்தியங்களிருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறியிருந்தன. எனினும் அதனைப் படையினர் மறுத்துள்ளனர்.

இன்னும் என்னென்ன எல்லாம் நடக்குமோ?-ராம கோபாலன்

ramagopalan.jpgஇலங்கைப் பிரச்சனையைக் காரணம் காட்டி இந்திய ராணுவ வாகனங்களையும் ராணுவத்தினரையும் தாக்குவது என்பது மன்னிக்க முடியாத தேச விரோதச் செயல் என்று இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் கூறியுள்ளார். கோயம்புத்தூரில் மே 2ம் தேதி விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சியினர் ராணுவ வண்டிகளை, ராணுவ வீரர்களைத் தாக்கியிருப்பது வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரிய விஷயம். இப்படி அசம்பாவிதம் நடக்கலாம் என்பதை மத்திய, மாநில அரசுகள் எதிர்பார்க்காமல் இருந்தது மிகுந்த கவலை அளிக்கிறது.

உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து உரிய நடவடிக்கையால் தடுத்து நிறுத்தாமல் இந்தத் தடவையும் கோட்டை விட்டுள்ளது. இது ஆபத்தானது. இலங்கையில் நடந்து வருகிற அட்டூழியங்கள் கடும் கண்டனத்திற்குரியது என்பதில் சந்தேகமே இல்லை. அந்நாட்டில் போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அவர்கள் உரிமையோடும் தன் மானத்தோடும் வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இலங்கைப் பிரச்சனையைக் காரணம் காட்டி பாரத ராணுவத்தைத் தாக்குவது என்பது மன்னிக்க முடியாத தேச விரோதச் செயல். இந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு மேலாகியும் மாநில அரசியல் கட்சிகள் எதுவும் இதற்குக் கண்டனம் தெரிவிக்காதது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டம்.

கோவையில் முன்பு காவல்துறையினர் தாக்கப்பட்டபோது பொறுப்பில்லாமல் வேடிக்கைப் பார்த்ததினால்தான் பெரும் கலவரம் மூண்டது. அதை அன்றே வேருடன் கிள்ளி எறியாமல் விட்டதால் இன்று ராணுவமே தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கியவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தால் திருப்பித் தாக்க முடியும். வெறி பிடித்த சிலர் இப்படித் தாக்கியது பாரதத்தின் இறையாண்மைக்கு விடப்படுகிற மிகப்பெரிய சவால். இந்தச் சம்பவம் நடந்தவுடன் விடுதலைப் புலி ஆதரவு இணைய தளங்களில் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது வருங்காலத்தில் என்னவெல்லாம் நிகழ முடியும் என்பதற்கு இது முன்னோட்டமாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட உள்நாட்டு யுத்தத்திற்கான ஒத்திகையோ இது என்று பலர் சந்தேகிக்கிறார்கள். வருங்காலத்தில் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்படலாம். வானொலி, தொலைபேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் சேதமாக்கப்படலாம், மின்சாரம், சாலைகள் துண்டிக்கப்படலாம். பிரிவினைவாதிகளும், பயங்கரவாதி களும் கைகோர்த்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். மத்திய, மாநில அரசுகள் இத்தகைய புல்லுருவிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் உள்ள தேசபக்த இளைஞர்கள் தான் இதனை எதிர்த்துப் போராடி முறியடிக்க முடியும். நாட்டிற்கு ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகளை எதிர்த்துப் போராட எவ்விலை கொடுக்கவும் ஆயத்தமாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.

கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுங்கள்-ஜெ

j-j-j.jpgகருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கு பயமில்லை. அவருக்குத் தான் என்னை நேருக்கு நேர் சந்திக்க பயம். நான் சட்டசபைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து கொண்டு தனக்கு முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கி வைத்து முகத்தை மறைத்துக் கொள்வார் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இன்று காலை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அது என்னவென்றால், நேற்று சென்னை விமான நிலையத்தில் நானும், கருணாநிதியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவானது. இதை எப்படி தவிர்ப்பது என்று காவல் துறை அதிகாரிகள் பதற்றமடைந்தார்கள், கவலை அடைந்தார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஏன், கருணாநிதியும், நானும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டால் என்ன? அதனால் என்ன ஆகப் போகிறது? நேருக்கு நேராக கருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கொன்றும் பயம் கிடையாது. ஆனால், நேருக்கு நேர் என்னை சந்திப்பதற்கு கருணாநிதி தான் பயப்படுகிறார்.

அதனால்தான் சட்டப்பேரவையில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் எதிரெதிரே அமரும் வகையில் இருந்த இருக்கையை 15 அடி தொலைவுக்கு மாற்றிவிட்டார். நான் பேரவைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து, தன் முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கிவைத்துக் கொள்வார் கருணாநிதி.

கருணாநிதியால் இப்போது கடமையாற்ற முடியவில்லை. முதலமைச்சர் செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை. ஆகவே, நீங்கள் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு அளிக்க வேண்டும். என்றார் ஜெயலலிதா.

ஈழத் தமிழரின் தன்மானம் காக்கத் தலைநிமிர்ந்த தமிழர் தலைவிக்கு டென்மார்க் தமிழ் மக்களின் வாழ்த்துக்கள்.

denmark_saiva_peravai.jpgஈழத் தமிழர்களுக்கோர் கலங்கரை விளக்காகத் தென்படத் தொடங்கியுள்ள உங்களை உலகத் தமிழ் மக்கள் எல்லோரும் ஓர் தாயுள்ளம் கொண்ட தமிழினத்தின் தலைவியாகவே பார்க்கின்றோம். இவ்வாறு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு டென்மார்க சைவ தமிழ் பண்பாட்டு பேரவையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.