அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அத்துருகிரியவில் கிளேமோர் குண்டுகள்,செய்மதி தொ.பேசிகள் மீட்பு

claymore.jpgஅத்துரு கிரிய வீடொன்றிலிருந்து கிளேமோர் குண்டுகள், செய்மதி தொலைபேசி, டெடனேட்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொழும்பு, அத்துருகிரிய சுமன மாவத்தையிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கிளேமோர் குண்டுகள், இரண்டு கைக்குண்டுகள், 4 டெடனேட்டர்கள், ரிமோட் கண்ரோல் ஒன்று, செய்மதி தொலைபேசியொன்று என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ். எஸ். பி. ரஞ்ஜித் குணசேக்கர தெரிவித்தார்.

தற்போது புலனாய்வுப் பிரிவில் தடுத்துவைக்கப்பட் டுள்ள சந்தேக நபர் ஒருவர்வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். குறிப்பிட்ட வீட்டில் தற்போது எவரும் இல்லாத நிலையில் வீடு மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடல்கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

அடுத்து வரும் சில தினங்களுக்கு மன்னார் குடா முதல் மேற்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பு கொந்தளிப் பாக இருக்குமென்பதால் இந்த நாட்களில் கடலுக் குச் செல்லுவதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது என்று வானிலை அவதான நிலையம் நேற்று தெரிவித்தது.

இக் காலப் பகுதியில் கடல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இது சில சமயம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க முடியும் என்றும் அந் நிலையம் குறிப்பிட்டிருக்கி ன்றது.

தற்போது தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ள தால் மன்னார் குடா, வட மேற்கு, மேற்கு, தெற்கு, தென் கிழக்கு கடற்பரப்பு அடுத்துவரும் சில தினங்க ளுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவில் ஆறு தமிழ் மக்களின் 168 மணித்தியால பட்டினி போராட்டம் நிறைவுபெற்றது

uk000000.jpgகடந்த 7 நாட்களாக பட்டினி போராட்டத்தை மேற்கொண்ட 2 பெண்கள் உட்பட ஆறு தமிழ் மக்களின் உண்ணாநிலை போராட்டத்தை நேற்று இரவு 7 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் பழச்சாறு கொடுத்து நிறைவுசெய்தார். அவர்களில் ஒருவரான நிமலன் கருத்து தெரிவிக்கையில்

“ அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களால் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு விடிவை பெற்று தர முடியும். ஆகவே ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனைவரும் பிரித்தானிய நோக்கியும், கனடாவில் வாழ்பவர்கள் அமெரிக்கா நோக்கியும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். தமிழரின் போராட்டம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது. நிச்சயம் ஒரு முடிவு காணும” என தெரிவித்துள்ளார்

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஏமாற்றுகிறது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டம் அதன் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னை பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* இலங்கையில் சிங்கள ராணுவத்தாக்குதல் காரணமாக 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் உயிருக்கு போராடி வருகிறார்கள். பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் உணவு, மருந்து குடிநீர் இல்லாமல் ராணுவத்தின் பிடியில் அவதிப்படுகிறார்கள்.

* போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது.

* ஈழத் தமிழர்களை பாதுகாக்க, ஐ.நா. மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பு ஏற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடு களுக்கு திரும்ப வேண்டும்.

* போரில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, சிங்கள ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா. மன்றம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எழுச்சி பேரணி நடத்துவது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை மரபணு பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் குறித்து மரபணுப் பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்பட்ட விஷேட வைத்தியர் குழுவொன்றினூடாக பரிசோதனைக்குத் தேவைப்படும் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் விமானம் மூலம் இன்று காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் பிரதான எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன், மரணித்துள்ளமையை நீரூபிக்கும் வகையில் விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் விடுத்த கோரிக்கையினை அடுத்தே அரசாங்கம் குறித்த பரிசோதனையைச் செய்வதற்கான தீர்மானத்தினை எடுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

கனகரட்னம் குறித்து உண்மை நிலை என்ன?

kanagaratnam.jpg
முள்ளிவாய்க்கால் மோதல் பகுதியில் அகப்பட்டிருந்த வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் பிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சதாசி்வம் கனகரட்னம் கடந்த ஒருவார காலத்துக்கு முன்னர் தம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்ததுடன், அதன் பின்னர் அவருக்கும் தமக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அழகிரி, கனிமொழிக்கு மந்திரி பதவி?

alagiri.jpgமுதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சாலை போக்குவரத்து துறையும், மகள் கனிமொழிக்கு சுகாதாரத்துறையும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹெலன் டேவிட்சன் (கன்னியா குமரி), ஏ.கே.எஸ்.விஜயன் (நாகை) ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்வரின் பேரன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது சந்தேகம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தீவிரவாத ஒழிப்பில் இலங்கையை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது – அனுர பிரியதர்ஷன யாப்பா.

SL_Army_in_Final_Phaseமூன்று தசாப்தங்களாக நிலவிய தீவிரவாதத்தை  உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதளவுக்கு இலங்கை அரசு இரண்டரை வருடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என தகவல் ஊடகத்துறை அமைசச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்;.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார்  என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதிலும் அவரது கதை முடிந்து விட்டது. அவரது அமைப்பும் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் பிரபாகரனை நிராகரித்து விட்டனர் என்பதை இந்தியாவின் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கர்ட்டுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க உதவுவோம் – ஜோன் ஹோல்ம்ஸ்

john-holmes.jpg இலங்கையில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மோதல்கள் நடைபெற்ற பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் படவேண்டும் அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படவேண்டும் இதற்கு நாமும் உதவிசெய்வோம்” என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில்,  இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமைகள் குறித்துத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இலங்கையில் நிலைமை மாறிவருகிறது இதனால் தகவல்கள் எதுவும் தெளிவாகவில்லை.

தற்போது காணப்படும் நிலையை எம்மால் உடனடியாகத் தம்மால் உறுதிப்படுத்தமுடியாதிருக்கின்றது.  மோதல் பகுதிகளிலுள்ள மக்கள் அனைவரும் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என நாம் நம்புகிறோம் என்றார்.

பிரபாகரன் இன்று இரவு பேட்டி!!-எஸ்.எம்.எஸ். பரபரப்பு

Pirabakaran_Vவிடுதலைப் புலிகள்  இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் இன்று இரவு டிவியில் பேட்டி அளிக்கவுள்ளதாகவும் ஒரு எஸ்.எம்.எஸ். உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபாகரன் குறித்து தினசரி ஒரு புதுத் தகவல் வெளியாகி பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. பிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு வெளியிட்ட வீடியோ படமும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

இந் நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி அளிக்கவிருப்பதாகவும் ஒரு எஸ்.எஸ்.எஸ். படு இந்தியாவில் வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.

அந்த எஸ்.எம்.எஸ்.ஸில் கூறப்பட்டுள்ளதாவது..

”மகிழ்ச்சிகரமான செய்தி. நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இது உண்மை. இன்று இரவு 10.30 மணிக்கு நமது தலைவர் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். பழ. நெடுமாறனும் அதுகுறித்துப் பேசவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இதை காணத் தவறாதீர்கள். இதை அனைத்து உண்மைத் தமிழர்களுக்கும் தெரிவியுங்கள்” என்று அந்த எஸ்.எம்.எஸ். கூறுகிறது.