அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அமெரிக்க உளவுத்துறையால் தனது வாழ்க்கைக்கு ஆபத்தென்கிறார் ஈராக் ஊடகவியலாளர்

170909.jpgசிறையி லடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சித்திரவதைக்குள்ளானதாக விடுதலையான ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி தெரிவித்தார். விடுதலையான பின்னர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை முன்நடார் அல் செய்தி நடத்தினார்.

இதன் போது தான் சிறையில் எதிர்கொண்ட இன்னல்கள் கொடுமைகள் பற்றி விளக்கினார். குளிர்ந்த நீரில் அமிழ்த்து வைக்கப்பட்டதுடன் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சவுக்கையால் மிகப் பலமாக அடிக்கப்பட்டதாகவும் ஈராக் ஊடகவியலாளர் விளக்கினார். விடுதலையான பின்னரும் கூட தனக்கு அச்சுறுத்தல்கள் தொடரும் அபாயமுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறை அரசுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதாக என்மீது போலிக் குற்றங்களைச் சுமத்த வாய்ப்புள்ளது.  எனவே எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம். இதனால் எனது விடுதலை எனக்கு சுதந்திரத்தையளித்துள்ளதாக நினைக்க முடியாது சிறையில் என்னைக் கொடுமைப்படுத்திய ஈராக் இராணுவ அதிகாரிகளை எனக்குத் தெரியும்.

தேவையேற்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடுவேன். ஈராக்கில் அவர்கள் (அமெரிக்க இராணுவம்) பொதுமக்களைக் கொலை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனது மன உணர்வை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது செருப்பை வீசிய முன்நடார் அல் செய்தி மூன்று வருட சிறைத் தண்டனைக்குள்ளானார் பின்னர் ஒருவருடமாக இத்தண்டனை குறைக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக ஒன்பது மாதங்களின் பின் நேற்று இவர் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.
 

“இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை வந்தால் சாட்சியம் கூற தயார்”: தமிழ்வாணி

170909damilvany-gnanakumar.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.  அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறியுள்ளார் 

போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறியுள்ளார்

இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன – சந்திரிகா

chandrika.jpgஇலங் கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவர் ஒரு வார பயணமாக கேரளா வந்தார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரம் வந்த அவர், தலைமை செயலகத்தில் முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்து பேசினார். பின்னர் சந்திரிகா குமாரதுங்க நிருபர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேரளாவுக்கு வர நான் பலமுறை திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போது தான் வர முடிந்தது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  அங்கு எனது கட்சி தான் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் இன்னும் அங்கு முழு அமைதி திரும்பவில்லை. இலங்கையில் மக்கள் பீதியுடன் தான் வழ்ந்து வருகின்றனர். அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என்றார். 

ஜீ.எஸ்.பி சலுகை: ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு

sarath-amunugama.jpgஜீ. எஸ். பி. பிளஸ் நிவார ணத்தைத் தொடர்ந்து பெறு வது தொடர்பாக ஐரோப் பிய நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்து மாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.  ஆடைத் தொழிற்துறை சார்ந்த வியாபாரிகளின் பங்களிப்புடன் இந்த நிவாரணத்தை மீளப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதிநிதி அமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜீ. எஸ். பி. பிளஸ் எம க்குக் கிடைப்பதை தடுக்க முற்பட்ட ரணில் விக்கிரம சிங்க, இன்று கரு ஜயசூரிய மூலமாக ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை வழங்குமாறு கோரியுள்ளார். ஏன் ஐ.தே.க. தலைவருக்கு இந்தக் கோரிக்கையை முன் வைக்க முடியாது. இந்த வருட இறுதி வரை ஜீ.எஸ்.பி பிளஸ் நிவாரணம் எமக்குக் கிடைக்க உள்ளது. தொடர்ந்து இந்த நிவாரணத்தை பெற சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறந்த நிலை யில் உள்ள நாடாகும். நாம் வறிய நாடல்ல. எமது நாட்டின் தனிநபர் வருமானம் 1500 அமெரிக்க டொலராகும்.  இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலை யில் இருந்து முன்னேறி மத்திய நிலையை அடைந்துள்ளது. வறிய நாடுகளுக்கே ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணம் வழங்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதிய கடன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

பொருளாதாரம் தொடர்பாக ரணில் கூறி வரும் எதிர்வு கூறல்கள் ஒரு போதும் நடந்தது கிடையாது. இலங்கைக்குக் கிடைக்கும் உதவிகளை தடுக்க அவர் முயன்ற போதும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

மூன்று மாதத்துக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் அளவு நிதியே வெளிநாட்டுக் கையிருப்பில் இருக்கும். ஆனால் தற்பொழுது 4 மாதங்களுக்கு போதிய நிதி எமது கையிருப்பில் உள்ளது. இந்தத் தொகை விரைவில் 6 மாதத்துக்கு போதியதாக உயரும். 1977 இல் ஒரு கிழமைக்குத் தேவையான நிதியே கையிருப்பில் இருந்தது.

தற்பொழுது வட்டி வீதம் குறைந்துள்ளது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. இலங்கை திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்ய எட்டு வங்கிகள் முன்வந்துள்ளன.

உள்நாட்டு நெல் உற்பத்தி 23 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதிச் செலவு குறைந்துள்ளது. எமது பொருளாதாரம் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதோடு ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருகிறது. அரச ஊழியர்களின் தொகையை 10 இலட்சத்தில் இருந்து 6 இலட்சமாகக் குறைக்க ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டது.

ஆனால் நாம் 10 இலட்சமாக இருந்த அரச ஊழியர்களின் தொகையை 12 இலட்சமாக அதிகரித்துள்ளோம். அரச ஊழியர்களை அழிக்க முயன்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரச ஊழியர்கள் குறித்து பேச அருகதை கிடையாது என்றார்.

நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் சதி

109009dalss.jpgஎந்த வகையிலாவது நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றி நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் சதி முன்னெடுக்கப்படுகிறது.  ராஜதந்திர சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இருவருடன் இணைந்து எதிர்க் கட்சியில் உள்ள இரு அரசியல்வாதிகள் இவ்வாறு சதி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பிரிவினைவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட போது வேறு உருவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2005 ல் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யவும் அவரை தோற்கடிக்கவும் சதி செய்யப்பட்டது.

இந்த வருட முதற்பகுதியில் ஜனாதிபதியை கொலை செய்தாவது பிரபாகரனை காப்பாற்ற சதி முன்னெடுக்கப்பட்டது. இந்த சதிகள் யாவும் வெற்றிகரமாக தோற்கடிக் கப்பட்டன. ஆனால் இன்று பல்வேறு வடிவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டி இலங்கைக்கு எதிராக சதி செய்யப்படுகிறது. ஐ.தே.க. தலைவர் ஒருவரும் எந்தக் கட்சிக்கும் இல்லாத அரசியல்வாதி ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் மீது சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்தவும் அதனூடாக நாட்டின் தலைமைத்துவத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மீது அவதூறு ஏற்படுத்தவே செனல்-4 தொலைக்காட்சியினூடாக சதி செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஐ.தே.க. கோரியது. இந்தக் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் ஐ.தே.க. அதுகுறித்து எதுவுமே வாய்திறக்காது உள்ளது.

செனல்-4 சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஒத்திவைப்பு விவாதத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின்படியே எந்த ஐ.தே.க. உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வில்லை என ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் தெரிவித்தனர்.

புலிகள் கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்தி வந்த போது மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்தது. ஆனால் இந்தக் கொள்வனவில் மோசடி இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி மிக் கொள்வனவை தடுக்க முயற்சி செய்தன.

மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்வதால் புலிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலே எதிர்க் கட்சியிலுள்ள சிலர் செயற்கையான முறையில் சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள புலி முக்கியஸ்தர் ஒருவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். இதனுடன் தொடர்புடையோரின் விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.

செனல்-4 தொலைக்காட்சியின் பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக பிரித்தானியாவில் இலங்கையர் போராட்டம் நடத்தினர். இதற்கு அங்குள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் உரிய பிரசாரத்தை வழங்கினர்.

அத்தகைய ஊடகவியலாளர்களில் ஒருவரான ஜனக அலஹப்பெருமவுக்கு ஐரோப்பாவில் இயங்கும் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இவரை அச்சுறுத்தி 139 தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன. இதில் 26 அழைப்புகள் பொலிஸாரினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. அரசியல் தேவைகளுக்காக நாட்டை காட்டிக்கொடுப்பதையும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும் ஐ.தே.க. தலைவர் முயற்சி செய்கிறார்.

அரசியல் ரீதியில் விவாதிக்கப்படுவதையும் விமர்சிப்பதையும் முகம்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுத்து ஆட்சி பீடமேற முயல வேண்டாமென ஐ.தே.க. தலைவரை கோருகிறோம் என்றார்.

அம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று காலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டும் ஒரு குழுவினரால் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி, சம்மாந்துறை – நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.

இருப்பினும பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இ.போ.ச. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் திருக்கோவில் ஊடாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதை ஒரு குழுவினர் தடுத்து வருவதாகவும் இதனையடுத்தே இச்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

தோட். தொழிலாளர் சம்பள அதிகரிப்பு கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

080909teawomen.jpg* 405 ரூபா சம்பள அதிகரிப்பு
* 6 மாத சம்பள நிலுவையை 3 கட்டங்களாக வழங்க முடிவு
* மருத்துவ சிகிச்சையில் சலுகை
* ஞாயிறு, போயா தினங்கள் விடுமுறை தினங்களாக கருதப்படும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் நேற்று ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் கைச்சாத்தானது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் எஸ். இராமநாதன் ஆகியோர் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையை வழங்கவும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

சம்பள அதிகரிப்புடன் தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும், 75 வீத வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவாகவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2009 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதன்படி தற்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பன செய்து கொண்ட சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றனவே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் ஆர். யோகராஜனிடம் கேட்டபோது 90 வீதமான தோட்டத் தொழிலாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். 40 வீத சம்பள அதிகரிப்பு ஒன்று இன்று கிடைத்திருக்கிறது. சில தொழிற் சங்கங்கள் இதனை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முயற்சி செய்கின்றன என்று கூறினார்.

வாங்கும் சக்தி எங்களுக்கு இருப்பது போன்று கொடுக்கும் சக்தி முதலாளிமாருக்கு இருக்கிறதா என்பது பற்றியும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வந்தோம் என்றும் இ. தொ.கா உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள இ. தொ. காவின் ‘செளமிய பவன்’ கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே ஆர். யோகராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காசா தாக்குதல்: இஸ்ரேல் போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறுகிறது ஐ.நா.விசாரணை

170909gazaviolence.jpgகாசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேல் இந்த ஆண்டின் துவக்கத்தில் காசா நிலப்பரப்பு மீது நடத்திய தாக்குதலின்போது, போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறியதாகவும் ஐ.நா.வின் விசாரணை கூறியுள்ளது.

இஸ்ரேல் பொது்மக்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி
பாலத்தீன ஆயுதக் குழுக்களும் போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், இந்த விசாரணைக்கு தலைமை வகித்த யுத்த குற்றங்கள் குறித்த முன்னாள் சட்ட நடவடிக்கை அதிகாரி ரிச்சர் கோல்ட்ஸ்டோன் கூறியுள்ளார்.

இந்த விசாரணையுடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்து விட்டது. இதற்கு உத்திரவிட்ட ஐநாவின் மனித உரிமை கவுன்சில் பாரபட்சமாக செயல்பட்டது என்று இஸ்ரேஸ் கூறியது.

ஈரான், ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தைகள் துருக்கியில் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகலாம்

170909iran-flag.jpgஈரானுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் துருக்கியில் நடைபெறும் என ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் ஜாவியர் சொலனா தெரிவித்தார். பெரும்பாலும் இப்பேச்சுக்கள் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகும். யுரேனியம் செறியூட்டல் வேலைகளுடன் அணுஆயுதங்களை விருத்தி செய்யும் ஈரானின் முயற்சிகளில் மேற்கு நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

இவை பற்றித் தெளிவான விளக்கங்களை ஈரான் இப்பேச்சுவார்த்தையின் போது வெளியிடும். உலக வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளும் ஈரான் பிரதிநிதிகளும் இப் பேச்சுக்களில் பங்கேற்பர். பேச்சு நடைபெறும் இடம்பற்றி இன்னும் இறுதி முடிவில்லை.

அரசாங்க சேவை வெற்றிடங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் நிரப்பப்படும்

sarath-amunugama.jpgஅரசாங்க சேவை வெற்றிடங்கள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் நிரப்பப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அரச சேவை ஆணைக்குழுவிடமிருந்து அதற்கான அதிகாரங்கள் பொது நிர்வாக அமைச்சுக்குக்கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கிணங்க நாடளாவிய ரீதியிலுள்ள கிராம சேவகர் வெற்றிடங்கள், நிர்வாக சேவை மற்றும் முகாமைத்துவ இணைந்த சேவையிலுள்ள வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்புதல், இடமாற்றங்கள், சேவைகளுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றில் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வரு கிறது.

இந்த வகையில் முகாமைத்துவ இணைந்த சேவைக்கு 3,000 பேரையும் கிராம சேவகர்களாக 1,000 பேரையும் இலங்கை நிர்வாக சேவைக்கு 300 பேரையும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கான பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் இம்முறை செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி உள்ளகப் பரீட்சைகள், பரீட்சைகள் திணைக் களத்தினாலன்றி அமைச்சின் மூலம் இலங்கை நிர்வாக சேவை கல்வி நிறுவனத்தில் நடை பெறவுள்ளது. மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலண்டர் ஒன்றை தயார்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முகாமைத்துவ சேவை தொடர்பில் கரு த்துத் தெரிவித்த அமைச்சர் அமுனுகம, அரச நிர்வாக சேவையிலிருந்து மாகாண சபைகளுக்குச் சென்றுள்ளவர்கள் அங்கு ஐந்து வருடங்களை நிறைவு செய்ததும் அவர்கள் மீள நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளத்தக்கதாக கட்டாயப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அரச சேவை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நட த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இவ் விடயத்தில் நடைமுறையிலுள்ள முறைமைகள் கட்டாயப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கிராம சேவகர்களை நியமிக்கும் விடயத்தில் சமுர்த்தி அதிகாரிகள் தத்தமது பகுதிகளில் தம்மை கிராம சேவகர்களாக நியமிக்கக் கோருகின்றனர்.  எனினும் இதுவிடயத் தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.