அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கோடன் வைஸின் கூற்று ஐ.நா.வின் கருத்தைப் பிரதிபலிக்காது – ஐ.நா.அறிவிப்பு

gordon_weis.jpgஇலங்கையில் பயங்கரவாதத்திற்கெதிரான கடைசிகட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாக முன்னால் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஐ நா வின் உத்தியோகபூர்வ கருத்தை பிரதிபலிக்காது என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மிகக்கூடுதலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கோடன் வைஸ் தெரிவித்திருக்கும் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

முன்னால் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமூகங்களுக்கிடையே சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் ஒரு சமாதானமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஐ.நா. தொடர்ந்தும் உதவி அளிக்கும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.நா. பேச்சாளரது கூற்றுக்களை முற்றாக மறுத்துள்ள இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வைஸின் கூற்று போலியானதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் என்பதால் அதுபற்றி யாரும் கரிசனைக் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வைஸ் புதிதாக முன்வைத்திருக்கும் இக்குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானதாகும். இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. அவர் அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கின்றார் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

கடைசிகட்ட போரில் சிவிலியன்கள் உயிரிழப்பு தொடர்பாக திடீரென கருத்துத் தெரிவித்திக்கும் அவரது கூற்றுக்குப் பின்னால் உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஹலுகல்ல இத்தகையதொரு கூற்றை தெரிவிக்க ஏன் எட்டு மாதங்கள் எடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” :பொதுநலவாய நாடுகளின் குழு

kamale-shsharma.jpgகடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான மைல்கல்லாக இல்லை.” என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில், தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” எனத் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.

சிறிகோத்தா சத்தியாக்கிரக போராட்டத்தில் அனோமா

anoma.jpgஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி சிறிகோத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அனோமா பொன்சேகாவும் கலந்துகொண்டுள்ளார். தனது கணவர் விடுவிக்கப்படும் வரை அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்

ஊடகவியலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமுன்னர் ஜனாதிபதிக்கு அறிவிக்க உத்தரவு

he_the_president.jpgஊடகவிய லாளர் ஒருவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமுன்னர் அதுபற்றி தனக்கு அறிவிக்குமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராவய செய்திப் பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

இடைத்தங்கல் முகாம் சிறுவர்களுக்கு புதிய பாடசாலை! வவுனியாவில் இன்று ஆரம்பம்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பத்தவர்களின் பிள்ளைகளுக்கென புதிய பாடசாலையொன்று இன்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா காமினி வித்தியாலயத்தில் இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு அவர் உரையாற்றுகையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக கல்வியை இழந்த வடபகுதி சிறுவர்களுக்கு தெற்கில் வாழும் சிறுவர்களைப்போன்று சுதந்திர கல்வியை வழங்கும் ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைய இப்புதிய பாடசாலை இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றக் கிரமங்களில் இவ்வாறான பல பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சும் பிராந்திய கல்விக் காரியமும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குகின்றன.

வவுனியா காமினி வித்தியாலயத்தில் மேலும் 2600 மாணவர்களுக்கு கல்வி போதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள்,  விளையாட்டு உபகரணங்கள். பாடசாலைத் தளபாடங்கள் என்பனவற்றை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படடுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

உல்லாசப் பயணிகள் வருகை; 31.9 சதவீதத்தால் அதிகரிப்பு!

Tilko_Hotelஇலங் கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை இவ்வருடத்தில் 31.9 சதவீதத்தால் அதிகரித்தள்ளதாக உல்லாசப் பயணிகள் சபை அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு 38468 உல்லாசப் பிரயாணிகள் வருகை தந்தனர். இவ்வருடம் அதாவது  2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இத்தொகை 50757 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தே இம்முறை பெருந்தொகையான உல்லாசப் பிரயாணிகள் வந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவி;க்கின்றன.

கடந்த வருடத்தைவிட இவ்வருடம் பிரித்தானியாவிலிருந்து வந்துள்ள உல்லாசப் பயணிகளின் தொகை 24.6 வீதத்தினாலும் பிரான்சிலிருந்து வந்தோர் தொகை 25.9 வீதத்தினாலும் ஜெர்மனியிலிருந்து வந்தோர் தொகை 54.1 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக உல்லாசப் பயணிகள் சபை மேலும் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்கத் திட்டம்! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்

gaminisamaranayake.jpgபல்கலைக் கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமிணி சமரநாயக்க தெரிவிக்கின்றார்.

அதன்படி வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

பிரதான அமைப்பாளரகள்; மாவட்ட அமைப்பாளர்களாக மாற்றம்! கட்சித் தலைவரான ஜனாதிபதி பணிப்புரை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் என்ற பதவியை இதன்பின்னர் மாவட்ட அமைப்பாளர் பதவி என மாற்றியமைக்குமாறு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷää கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்;.

தனிப்பட்ட அபிப்பிராய வாக்குகளை பெறும் போட்டி நிலையை தவிர்த்துக்கொள்வது உட்பட புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது மற்றும் மக்கள் அபிமானத்துடன் கூடிய அரசியல்வாதிகள் குழுவொன்றை உருவாக்குவது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும். மேலும் ஒரு குழு என்ற ரீதியில் செயற்பட்டு தமது வாக்கு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக அதிகரிப்பதையும எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை செயற்படுத்தப்பட்ட தொகுதி அமைப்பாளர் பதவி ஊடாக சிலர் அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு போட்டி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்ததே. இவ்வாறான போட்டி நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் அதிருப்தி நிலையை தோற்றுவித்துள்ளது. சமூக ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இது பெரும் தடையாக உள்ளது. இந்த குறைபாட்டை நீக்குவதற்கு மாவட்ட அமைப்பாளர் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒழுக்க விழுமியங்களை பேணும் அதேவேளை ஒருங்கிணைந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது அதிகார பிரதேசத்தை மீளமைப்பது இந்த செயற்பாட்டின் மற்றொரு நோக்கமாகும்.

பொன்சேகாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் ஆதங்கம்

21 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்துக்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்டனையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பழிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத்தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்.

கொழும்புத்துறை குண்டு வெடிப்பு: 2 மாணவர் மரணம்; 6 பேர் காயம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக் கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.45 மணியளவில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகாமையில் பந்துபோன்ற வொன்று காணப்பட்டதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் சிலர் அதனை எடுத்து பரிசீலித்துள்ளனர்.

அவ்வேளை அங்கு வந்த பெரியவர் ஒருவர் அதனை வீசிவிடுமாறு கூறியதையடுத்து மாணவர்கள் தூரத்தில் எறிந்தபோதே அது வெடித்துச் சிதறியுள்ளது. அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.