அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

திருகோணமலை தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் இடையூறு சம்பந்தன் விசனம்

திருகோணமலை வடக்கேயும் தெற்குப் பகுதியிலும் உள்ள தமிழ் வாக்களர்கள் வாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அது குறித்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடமும் பிரதிப்பொலிஸ் மா அதிபரிடமும் தாம் முறையிட்டிருப்பதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை காலை திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று சம்பந்தன் வாக்களித்தார். அதன் பின்னர் வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆளும் கட்சியில் போட்டியிடுகின்ற செல்வாக்குள்ள வேட்பாளர் ஒருவரின் ஆட்கள் திருமலை வடக்கேயும் தெற்கேயும் உள்ள தமிழ்வாக்காளர்கள் வாக்களிக்கமுடியாதபடி தடைகளை ஏற்படுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.

நீதியான தேர்தல் அல்ல; அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் தீர்மானம் – ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க

பாராளுமன்றத் தேர்தலானது நீதியாகவோ, சுதந்திரமாகவோ இடம்பெறவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ்சாட்டியதுடன், குறிப்பிட்ட சில இடங்களில் மீள வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுப்பது தொடர்பாக தாங்கள் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறது.

வாக்காளர் அச்சுறுத்தப்பட்டமை,தேர்தல் முகவர்களை மிரட்டியமை போன்ற பல சம்பவங்கள் குறித்து தங்களுக்கு அறிக்கைகள் கிடைத்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். எதிர்க்கட்சிகளின் முகவர்கள் விரட்டப்பட்டதாகவும் அதனால் இந்தத் தேர்தலை நீதியான தேர்தல் எனக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

“இது நேர்மையான தேர்தல் அல்ல. விரைவில் என்ன நடவடிக்கை எடுப்பதென்பது குறித்து நாங்கள் கலந்துரையாடவுள்ளோம்  என அவர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு வீதம் மிகவும் தாழ்ந்த மட்டத்திலிருப்பதை ஐ.தே.க.வுக்குக் கிடைத்த அறிக்கைகள் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்கம் பல தேர்தல்களை நடத்தியதால் மக்கள் சலிப்படைந்துவிட்டதாகத் தென்படுவதாக அவர் மேலும் கூறினார். இது இவ்வாறிருக்க எதிரணியின் தேர்தல் முகவர்கள் விரட்டப்பட்ட பல சம்பவங்களை தேர்தல் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அத்துடன், சில முகவர்கள் கடமைக்கு சமுகமளித்திருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் மீண்டும் தேர்தல்

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 37 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அறிய வருகின்றது. நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் தேர்தல் நடைபெரும் திகதி பின்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அகில இலங்கை ரீதியில் தேர்தல் முடிவு வெளிவர காலதாமதம் ஏற்படலாம்.

இடம்பெயர்ந்தோர் ஆர்வத்துடன் வாக்களிப்பு: வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்கு பதிவு

இடம்பெயர்ந்துள்ள மக்கள் நேற்று அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்த வர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் நேற்று 57 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருந்ததாகவும் அரச அதிபர் கூறினார். அதேநேரம் வன்னி மாவட்டத்தில் 33 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரில் 15 ஆயிரத்து 763 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கென மெனிக் பார்ம்மில் 17 வாக்குச் சாவடிகளும் தமிழ் மகா வித்தியாலயத்தில் 16 வாக்குச் சாவடிகளுமாக 33 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காலை 7 மணி முதல் ஆரம்பமான வாக்களிப்பில் மக்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் சென்று வாக்களித்துள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கென விசேடமாக 100 பஸ்கள் தொடர்ச்சியாக சேவையிலீடுபடுத்தப்பட்ட தனால் மக்கள் எவ்வித சிக்கலுமின்றி வாக்களிக்கக் கூடியமாகவிருந்ததென அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த மேற்படி மக்கள் சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் சுதந்திரமாக இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய வாக்க ளிப்பின்போது எவ்வித வன்முறைகளோ முறைகேடுகளோ இடம்பெறவில்¨யெனவும் அரச அதிபர் கூறினார்.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நிருவாக மாவட்டங்களில் மீள்குடியமர்த்தும் பணிகள் முற்றுப்பெற்றுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையங்களில் சுமுகமான வாக்களிப்பு இடம்பெற்றது.

நெடுங்கேணி, வன்னிவிளாங்குளம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், விநாயகபுரம், துணுக்காய், முத்தையன்கட்டு, கற்சிலைமடு, சின்னத்தம்பி, மாங்குளம், திருமுருகண்டி, வற்றாப்பளை, உயிலங்குளம், மல்லாவி, யோகபுரம், அம்பலபெருமாள்குளம், புத்துவெட்டுவான் ஆகிய இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவு வாக்களிப்பு நிலையங்களும் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நான்கு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்தன.

மடு உதவி அரச அதிபர் பிரிவின் இரணை இலுப்பைக்குளம், விளாத்திக்குளம் கிராம அலுவலர் பிரிவு அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட் டிருந்தது.

பொதுமக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவிப்பு -சட்ட விதிமுறைகளை மீறினால் கைது

gamini.jpgவன் முறைகள் மற்றும் அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், சகல வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான தேர்தல் நடைபெற்றதாக தெரிவித்த அவர், பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார்.

தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதிமுறைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு அமுலில் உள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றார். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிரு க்கும் 58,800 பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்தும் இந்த நாட்களில் கடமையில் இருப்பர் எனவும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தோல்வியடைந்தவர்களும் அமைதியாக செயற்படுமாறு தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், எவரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார். அவ்வாறு குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.

வடக்கு கிழக்கில் தேர்தல் வாக்களிப்பு மிகவும் அமைதியாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், 30 வருடத்திற்குப் பின்னர் எவ்வித வன்முறையுமின்றி வடக்கு, கிழக்கில் தேர்தல் நடைபெற்றுள்ளது என்றார். நீதியானதும், அமைதியானதுமான தேர்தலை நடத்துவதற் குத் தேவையான வகையில் வடக்கு, கிழக்கு உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனரென்றும் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிலையத்தில் போதையிலிருந்த கான்ஸ்டபிள் கைது

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அகலவத்தை தினியாவல 86 வது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்ததையடுத்து களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இப்பொலிஸ் கான்ஸ்டபிளை சேவையிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.

நேற்று 7ம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  வேறு பொலிஸ் உத்தியோகத்தர் இங்கு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் அமைதியான வாக்களிப்பு

பதினான் காவது பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7:00 மணிக்கு நாடு முழுவதிலும் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது. இன்று மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்தது. தேசம்நெற் சார்பில் கண்டி, மாத்தளை, குருணாகலை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த எமது குழுவினர் தேர்தல் அமைதியாக நடைபெற்றதை உறுதிப்படுத்தினர். அத்துடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. சில சில இடங்களில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் கூட அவை வாக்களிப்பினை பாதிக்கக் கூடியதாக இருந்ததாக இதுவரை உத்தியோகப் பூர்வமாக கிடைக்கப் பெறவில்லை. 

அமைதியான தேர்தலொன்றை நடத்துவதற்காக முப்படையினரும் பொலீஸாரும் விசேட கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மக்கள் வாக்களிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. பெரும்பாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது வாக்களிப்பு விகிதம் குறைவடைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு முதல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிவுகள் வெளியானவுடன் மாவட்ட ரீதியான முடிவுகளை தொகுத்துத் தர தேசம்நெற் விசேட ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

GCE O/L results uploaded to the web today

anura-edirisingha.jpgThe results of the G.C.E. Ordinary Level Examinations has been uploaded to the internet today.

Commissioner General of Examinations Anura Edirisinghe said that  students can log on to www.doenets.lk to obtain their results. Principals of Colombo and Sri Jayewardenepura education zones can obtain the result sheets by calling over at the Examination Department tomorrow morning.

Anura Edirisinghe said that the result sheets of the other schools will be posted tomorrow. Results of more than 400 thousand students who sat for the examination under the new syllabus will be released today. Results of the candidates who wrote for the examination under the old syllabus is expected to be released during the festive season.

196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல்

n2.jpgஏழாவது பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 196 உறுப்பினர்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 22 மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலையில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் இதுவாகும்.

இதன்படி, நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்புகள் நடைபெறுகின்றன.

இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்காக சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்துள்ளன. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்று (7) பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (7) கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

மாவட்ட செயலகங்களுக்கு சமுகமளித்திருந்த வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், உதவியாளர்கள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பாக அறிவூட்டும் கூட்டங்கள் நேற்று (7) காலை நடைபெற்றன. அதன் பின்னர் கச்சேரிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த சகல உத்தியோகத்தர்களும் நேற்று (7) தமக்கு ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வாக்காளர்களுக்காக 28 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் கூறினார்.

வாக்களிப்பு 4.00 மணிக்கு நிறைவடைந்த பின்னர் சகல வாக்குப் பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கு தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்காக தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,387 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

வெள்ளம் அல்லது அனர்த்தங்கள் ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்காக படகுகளை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இரவு 10.00 மணிக்குப் பின் முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நள்ளிரவுக்குப் பின்னர் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

தொகுதி மட்டத்திலான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றிபெற்ற கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். நாளை பிற்பகலாகும் போது விருப்பு வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கும் அடையாளத்தை உறுதி செய்து வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதி வாக்கெடுப்பு நிலையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏதும் வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இங்கு மோசடிகள், அச்சுறுத்தல்கள் என்பன நடந்திருப்பது உறுதியானால் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன் புதிய பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாராளுமன்றம் 22ம் திகதி கூட உள்ளது.

n1.jpg

சனத் ஜயசூரிய நேற்று தபால் மூலம் வாக்களிப்பு

jayasooriya.jpgமாத்தறை மாவட்ட ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய நேற்று காலை (7) தபால் மூலம் வாக்களித்ததாக மாத்தறை உதவித் தேர்தல் ஆணையாளர் சுனேத் லோசன தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு செல்வதற்காகவே இவருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் சட்ட த்தின் 20 (சீ) பிரிவின் பிரகாரம் அவருக்கு முன்கூட்டி வாக்களிக்க தேர்தல் ஆணை யாளரின் விசேட அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது, காலை 11.30 மணியளவில் மாத்தறை உதவித் தேர்தல் காரியாலயத்தில் சனத் வாக்களித்தார்.

அவர் நேற்று இந்தியா பயணமாக ஏற்படாகியிருந்தது, ஐ.பி.எல். போட்டிகளில அவர் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.