அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

MoU+Meeting_08Aug10Whilst the Sri Lankan Opposition parties have on 8 August 2010 called on the Government (GOSL) to release the draft constitutional and electoral reforms that are to be amended and how they will be amended in the proposed new Sri Lanka Constitution, an important milestone in uniting the Tamil diaspora in London was achieved on the same day.

A representative gathering of over 50 members of Tamil and Muslim political parties, independent researchers and general public gathered at Walthamstow, East London unanimously endorsed a Memorandum of Understanding of all Tamils and Muslim communities in London to implement at the earliest opportunity the guidelines consisting of Nine (9) Minimum Aspirations of All Tamils and Muslims for circulation among the wider diaspora around the world and in Sri Lanka.

MoU_Meeting_08Aug10These Minimum Aspirations – the Walthamstow Guidelines – are not demands on the Government (GOSL) for the settlement of the Tamil problem, but are the accepted minimum conditions to be recommended to all elected Tamil and Muslim political parties and their representatives in Sri Lanka and all Tamil & Muslim diaspora  for co-operation with the Government (GOSL) to alleviate the suffering of the Tamil speaking peoples, as well as to lend support to the Government (GOSL) to amend the Constitution of Sri Lanka speedily.

The Walthamstow Guidelines are practical and pragmatic principles within a set timeframe for requesting implementation by the Government (GOSL) for good governance, reconciliation and enduring peace in Sri Lanka. The Guidelines were formulated by an all party Tamil and Muslim sub-committee consisting of political activists, adversaries, independent researchers and think tank who studied the Tamil intransigence and political naivety over one year and made these guidelines in a Consultation Paper to the larger diaspora and which was unanimously accepted by the Tamil and Muslim representatives at yesterday’s ,meeting.

The list of the Nine Minimum “Walthamstow Guidelines”  will be published soon.

Victor Cherubim
8 August 2010.

ஓகஸ்ட் 08 ஞாயிறு : தமிழர்களிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவதற்கான சந்திப்பு : தேசம்

தமிழ் அரசியல் தலைமைகளிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவும் அப்புரிந்துணர்வை தொடர்ந்தும் தக்க வைப்பது பற்றியுமான கலந்துரையாடல் ஓகஸ்ட் 8 2010 இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் பிரிவுகளினின்றும் ஆர்வலர்கள் கலந்தகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பின் முதலாவது அம்சமாக அண்மையில் இலங்கை சென்று ஓகஸ்ட் 6 2010ல் லண்டன் திரும்பியுள்ள வாசுதேவன் இலங்கையின் தற்கால யாதார்த்த நிலவரம் பற்றி தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து ஒரு குறுகிய கலந்துரையாடல் இடம்பெறும்.

அதனை அடுத்து கலந்துரையாடலின் முக்கிய அம்சமான குறைந்தபட்ச புரிந்துணர்வு மற்றும் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் பற்றிய விடயம் கலந்துரையாடப்படும். குறைந்தபட்ச புரிந்தணர்வை எட்டுவது அதற்கான வரையறைகள் பற்றி கடந்த ஓராண்டு காலமாக இடம்பெற்ற விவாதங்களை ரவி சுந்தரலிங்கம் வி சிவலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.

அவர்களுடைய தொகுப்புகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும். கலந்துரையாடலின் முடிவில் குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறைகள் எது என்பதனை கூடி உள்ளவர்களின் ஒப்புதலுடன் தீர்மானிமாக்கப்படும்.

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் பின் பொதுத்தளத்தில் வெளியிடப்படும். அது தொடர்பான மேலதிக விவாதங்கள் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெற்று அவை பரவலாக்கப்படும்.

இக்கலந்தரையாடல் தேசம் கூட்டங்கள் வழமையாக இடம்பெறும் குவார்கஸ் ஹவுசில் இடம்பெறாது. வோல்தம்ஸ்ரோவில் கீழுள்ள புதிய முகவரியில் இடம்பெறும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

._._._._._.

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08,  2010ல் : தேசம்

Thesam Logoஇலங்கைத் தமிழ் மக்களுடைய வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம் மே 18 2009ல் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் ஆரம்பித்தது. முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழலில் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். பல்வேறு முரண்பாடுகளும் பல்வேறு குறைபாடுகளும் இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளிடமே உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் பல்வேறு கூறுகளாகி நிற்பதனால் தமிழ் சமூகம் பலவினமான நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழர்களை ஆயுத பலம்கொண்டு பலாத்காரமாக ஓரணியல் நிறுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலாலும் அத்தலைமைகளை ஓரணியில் கொண்டு வரமுடியவில்லை. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் வந்தவர்களும் உண்மையான முழுமையான புரிதலுடன் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மே 18 2009ற்குப் பின்னான அவர்களின் அரசியல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்விற்கு வரவேண்டும் என்பது அவசியமானதாக இருந்தது. இப்புரிந்துணர்வு வெளி அழுத்தங்களால் உருவாவதைக் காட்டிலும் அவர்களின் சுயவிருப்பில் இருந்து அவர்களின் சிந்தனையில் இருந்து உருவாவது அந்தப் புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும்.

02Aug09_Audienceஇப்புரிந்துணர்வை எட்டுவதை அடிப்படையாகக்கொண்டு யூன் 21 2009இல் ‘அடுத்த நகர்வை நோக்கிய ஒரு பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் தேசம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

Constantine_T_and_Srithunga_Jதமிழ் மக்களைப் பாதிக்கின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடந்த 13 ஆண்டுகளாக தேசம் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது. 2002ல் மலேசியத் தமிழ் அறிஞர்களை வரவழைத்து மலேசிய தமிழ் இலக்கியம் – நூல் கண்காட்சியும் கலந்துரையாடலும், 2006இல் கலாபூஷணம் பி எம் புன்னியாமீன் அவர்களை வரவழைத்து தமிழ் – முஸ்லீம் இனஉறவுகள், 2007ல் கொன்ஸ்ரன்ரைன் தலைமையில் லண்டன் வந்திருந்த ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கை: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல், 2008இல் 13வது திருத்தச்சட்டம் பற்றிய சந்திப்பு இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் தேசம் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. 

இவ்வாறு சமகால விடயங்களை கலந்துரையாடி விவாதிக்கும் தேசம் யூன் 21 ஏற்படுத்திய சந்திப்பில் பல்வேறு முரண்பட்ட அரசியல் கருத்துக்களையும் அரசியல் பின்னணியையும் உடையவர்கள் கலந்துகொண்டு  பல்வேறு அரசியல் கருத்துக்களையும் முரண்பாடுகளையும் உடையவர்கள் மத்தியில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அதற்கான உரையாடல் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இச்சந்திப்பில் இலங்கையில் செயற்படுகின்ற பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Shanmugaratnam Nஅதன் அடிப்படையில் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பில் பேராசிரியர் என் சண்முகரட்ணம், வியூகம் ஆசிரியர் ரகுமான் ஜான் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில் கீழுள்ள எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்று  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

02Aug09_Audienceஇந்த எட்டு விடயங்களிலும் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறை என்ன என்பது பற்றி ஆராய்ந்து உடன்பாடு எட்டுவதற்கு 15 பேர் கொண்ட செயற்குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் 12 சந்திப்புக்களை மேற்கொண்டு தற்போது குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் இதுவே இறுதியானது அல்ல. இந்த வரையறையை நிர்ணயம் செய்ய கேட்டுக்கொண்ட யூன் 21 2009, ஓகஸ்ட் 02 2009 பொதுக் கூட்டத்தளத்தைக் மீண்டும் கூடி அவர்களின் கருத்துக்களையும் பெற்று இந்தக் குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இது பற்றிய விவாதம் ஆரம்பிக்கப்பட்ட போது அன்றைய நிலைமைகள் புரிந்துணர்வு எட்டப்படுவதற்கான தேவையை வலியுறுத்திய போதும் கட்சிகள் தேர்தல்களை எதிர்நோக்கி இருந்த அப்போதைய சூழல் புரிந்துணர்விற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Tamil_PP_28July10யூன் 24 2010இல் முதலில் சந்தித்த தமிழ் கட்சிகள் தற்போது தொடர்ச்சியாக 3 சந்திப்புக்களை மேற்கோண்டு தமக்கிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கும் தமிழ் மக்களுடைய நலனை முன்னிலைப்படுத்தும் பொது வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படவும் முன் வந்துள்ளன. மேலும் சந்திப்புக்கள் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பணிமனையிலோ என்றில்லாமல் பரஸ்பர உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தமிழ் கட்சிகளின் அடுத்த சந்திப்பை கிழக்கு மாகாணத்தில் நடாத்த முதலமைச்சர் சந்திரகாந்தன் அழைப்புவிடுத்துள்ளார். அதன்படி அச்சந்திப்பு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இத்தமிழ் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டிற்கு வரும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மௌனமாகவே உள்ளது. தமிழ் மக்களின் கூடிய பிரதிநிதித்துவத்தை வைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியம் என்பதனை ஏனைய கட்சிகள் அறிந்தே தமது அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒவ்வொருவருமே பொறுப்புடையன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் கூடிய பொறுப்புடையது. பெரும்பாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதன் தலைமைகளை உருவாக்கியது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலே. அந்த வகையில் வி ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, ஆர் சம்பந்தன் ஆகியோர் தாங்கள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகளுடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்து தமிழ் மக்களுடைய நலன்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுப்பதுடன் தமிழ் மக்களுடைய அரசியல் சமூக பொருளாதார வாழ்நிலையின் தரத்தை உயர்த்துவதற்கு முன்வர வேண்டும்.

தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் தமக்கிடையேயான முரண்பாடுகளுடன் முட்டிமோதி காலத்தையும் நேரத்தையும் விணடிப்பது தமிழ் மக்களின் வாழ்நிலையையே கீழ்நிலைக்கு இட்டுச்செல்ல காரணமாகிறது. அதனால் தமிழ் கட்சிகளிடையே ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அழுத்தங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் வழங்கப்பட வேண்டும்.

சந்திப்பு விபரம்:

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு

காலம்: ஓகஸ்ட் 8, 2010 (ஞாயிறு) மாலை 16:30

இடம்: Lord Brooke Hall, Shernhall St, Walthamstow, E17 3EY (next to Vallentin Road)

இக்குறைந்தபட்ச புரிந்தணர்வின் வரையறையைச் செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஆன சந்திப்பு ஓகஸ்ட் 08 2010ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னைய சந்திப்புக்கள் பற்றிய விபரமும் இணைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான வரையறையை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்னையை சந்திப்புக்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

Vavunia_Bus_Strandதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வவுனியா நகரசபை நிர்வாகச் சீர்கேடு ஊழல் மோசடி போன்ற விடயங்களினால் அவப்பெயரைச் சம்பாதித்து உள்ளது. இதன் காரணமாக இந்நகரசபையின் தலைமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் உட்பட 8 நகரசபை உறுப்பினர்கள் நகரசபைத் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இதற்கு முன்னதாக நகரசபையின் நகர சுத்தித் தொழிலாளர்கள் நகரசபைத் தலைவரும் (எஸ் என் ஜி நாதன்) நகரசபையின் சிற்றூழியரும் (ரி மரியதாஸ்) தங்களை சாதியின் அடிப்படையில் அவமானப்படுத்தி முறைகேடாக நடந்து கொண்டாதாக ஒரு கடிதத்தை தங்கள் கையொப்பங்களுடன் வவுனியா நகரின் உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் தங்களது கோரிக்கையை வைத்து வேலை நிறுத்தத்தையும் மேற்கொண்டு இருந்தனர்.

கடந்த 30 ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டம் இன விடுதலையை முதலில் வென்றெடுப்போம் சாதிய பிரதேச பெண் ஒடுக்குமுறையை அதன் பின்னர் பார்க்கலாம் என்ற மனப்பான்மையுடன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருந்தனர். ஆனால் விடுதலைப் போராட்டம் தடம்புரண்டு அதிகாரத்திற்கான போராட்டமாகி ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளும் விடுதலையின் பெயரில் அமுக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு அமுக்கப்பட்டு இருந்த பிரதேச சாதிய பெண் ஒடுக்குமுறைகள் காலத்திற்குக் காலம் தலைகாட்டவே செய்கின்றன.

தமிழ் மக்களைப் பன்மைத்துவ சமூகமாக ஏற்றுக்கொள்ளாமல் அதனை ஒற்றைப்பரிமான சமூகமாகக் கொண்டு தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழ் தேசியம் அதன் மோசமான சாதியம் பிரதேசவாதம் பெண் ஒடுக்குமுறை என்பனவற்றை எப்போதும் தன்னுள்ளே அடைகாத்து வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் தலைமைகள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையில் உள்ள நகரசுத்தித் தொழிலாளர்களை அன்றைய தமிழ் அரசர்கள் போல் இன்றும் அடிமைக் குடிகளாகவே நடாத்தும் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். வரலாற்றை புரட்டி தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகக் கற்பிக்க முற்படுகின்றனர் சிலர். அன்று இந்த நகர சுத்தி தொழிலாளர்கள் இரவிலேயே சுத்திகரிக்கப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பகலில் நகரத்தில் நடமாடவே தடைவிதிக்கப்பட்டனர். அவர்கள் நகரின் ஒதுக்குப் புறத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இன்று பல நூற்றாண்டுகள் உருண்டோடிய பின்னரும் நகரசபை ஊழியர்களை ”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” என்று பேசுகின்ற உரிமையை தமிழ் தேசியக் கூட்டமைபின் நகரசபைத் தலைவருக்கு யார் வழங்கியது. இதுவரை இத்தலைவருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்ன நடவடிக்கையை எடுத்தது?

இன்று இலங்கை அரசாங்கித்தின் இனவாதப் போக்கினை மிகச் சரியாக மிக நியாயமாகக் கண்டிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் எமது சமூகத்தின் மற்றுமொரு பகுதியை தீண்டத்தகாதவர்களாக இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்துவதற்கு மெளனமாக அங்கிகாரம் வழங்குகின்றதா?

._._._._._.

இதுவே வவுனியா நகர சுத்தித் தொழிலாளர்கள் தங்கள் மனக்குறையை எழுத்தில் வடித்த கடிதம்.

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர் சங்கம்    

ஆளுனர்
வடக்கு மாகாணம்
திகதி: 23.07.2010

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள்.

Vavunia_UC_Letter01ஜயா!

வவுனியா நகரசபை ஊழியர்கள் ஆகிய நாங்கள் தங்களிடம் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்வது.

22.07.2010ம் திகதியன்று எங்களது ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுகின்றார். இவர் எங்களுக்கு சிறு நிகழ்வு நடத்துவதற்கு ஏற்ப்பாடு செய்தார். இந் நிலையில் எங்களன் நிகழ்வை நடத்துவதற்கு ஓர் இடம் அல்லது மண்டபத்தில் சிறு இடம் ஒதுக்கி தருமாறு தலைவரிடம் கேட்டபோது அவர் அனுமதி வழங்கினார். ஆனால் இச்சபையில் சேவை நீடிப்பில் இருக்கும் திரு மரியதாஸ் என்பவர் சிற்றுஊழியர். அவர் எங்களுக்கு இடம் தரமுடியாது என்று கூறி சாதியை இழுத்து கெட்ட வார்த்ததைகளால் ஏசினார். எங்களை மரியாதை குறைவாக நடாத்தினார். இன்ந் நிலையில் மீண்டும் தலைவரை அணுகினோம் அவரும் எங்களை வெளியே போங்கடா சக்கிலிய நாய்களே என்று விரட்டினார். அதற்கு பிறகு நாங்கள் சபையின் முன் முற்றத்தில் எங்கள் நிகழ்வை நடாத்தினோம்.

ஆகையால் எங்கள் ஊழியர்களை தரக்குகறைவாக மனித உரிமை மீறும் அளவுக்கு அவமானப்படுத்திய நகரசபைத் தலைவர் அவர்களையும் சேவை நீடிப்பில் இருக்கும் திரு மரியதாஸ் அவரின் மீதும் பகிரங்கமான விசாரணை நடாத்தி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இச்சபையின் ஊழியர்களுக்கு உரிய உரிமையையும் இட வசதிகளையும் உறுதிப்படுத்தி தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: தாங்கள் இதில் தலையிட்டு தீர்த்து தரும் வரையில் எங்கள் வேலை நிறுத்தம் தொடரும்.

பிரதி:
1.உள்ளூராட்ச்சி ஆணையாளர் திருகோணமலை
2.செயலாளர் நகரசபை வவுனியா
3.உள்ளூராட்ச்சி உதவி ஆணையாளர் வவுனியா
4.அரசாங்க அதிபர் வவுனியா
5.மனித உரிமை ஆணைக்குழு வவுனியா
6.உதவி ஆணையாளர் தொழில் அலுவலகம் வவுனியா
7.தலைவர் வர்த்தக சங்கம் வவுனியா

Vavunia_UC_Letter02உண்மையுள்ள
சுகாதார தொழிலாளர்கள்
(64 கையெழுத்துக்கள்)

கே பி யின் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு லண்டனில் அலுவலகமும் இணையத்தளமும் – சிறிபதி சிவனடியாரின் அறிக்கை

Kumaran_Pathmanathan_New_Photoயூன் நடுப்பகுதியில் இலங்கை சென்று குமரன் பத்மநாதனை சந்தித்துத் திரும்பியுள்ள புலம்பெயர் கே பி ஆதரவுக்குழு தங்கள் தங்கள் செயற்பாடுகளை வேகப்படுத்தி வருவதாகத் தெரியவருகின்றது. தங்கள் பயணத்திற்குப் பின் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பியவர்கள் தொடர்ந்தும் தங்கள் ஆதரவுத் தளத்தை உசார்ப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கி அதனை அறிமுகம் செய்துள்ள இவர்கள் தங்கள் பயணத்தின் போது எடுக்கப்பட்ட விடியோப் பதிவுகளை அதில் பதிவிட்டுள்ளனர். இவ்விணையத்தளம் தொடர்பாக சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விடயங்களை கே பி கவனித்துக் கொண்டிருந்த போது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரும் நிதிசேகரிப்பில் முன்னின்றவருமான சிறிபதி சிவனடியார் அந்நிதியுடன் தொடர்புடையவர்களை அணுகுவதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கேபி க்கு ஆதரவான புலம்பெயர் குழு லண்டனில் அவர்களுக்கான அலுவலகம் ஒன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். அல்லது ஆரம்பிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர் எனத் தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர்ந்த குழுவில் பயணித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் மறுத்திருந்தார். இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளில் கேபி க்கு எதிரான அணி பலமாக இருப்பதால் கேபி க்கு ஆதரவானவர்கள் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பது ஆபத்தானதாக அமையும் என அவர்களிடையே அச்சம் உள்ளது.

கேபி யைச் சந்திக்கச் சென்ற சிறிபதி சிவனடியார் தீபம் தொலைக்காட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக அங்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாகவே தீபம் தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். தீபம் தொலைக்காட்சியின் முக்கிய பங்குதாரரான துரை பத்மநாதனே இந்த முடிவை எடுத்ததாகத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. சிறிபதி சிவனடியார் தற்போது முழுமையாக கேபி இன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

._._._._._.

Kumaran_Pathmanathan_New_Photo‘நெர்டோ’ இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்பான நண்பர்களே, உறவுகளே, வணக்கம், வாழ்த்துக்கள்,

புதியதொரு இணையதளம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. அறிவியல் கண்கொண்டு பார்த்தால் இது இணையதளம், மனித நேயத்தோடு பார்த்தால் எங்களின் இதயதளம். முகாமில் இருக்கும் எமது மக்களின் மறுவாழ்வுப் பணியை நோக்கமாகக் கொண்டு இந்த www.nerdo.lk இணையதளத்தை உங்கள் முன் அர்ப்பணிக்கின்றோம்.

இதில், நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெறும் மக்கள் நலத்திட்டங்கள், ஆதரவுக்கரம் நீட்டுவோரின் ஆலோசனைகள் இப்படி பல்வேறு விடயங்களைத் தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.

இனத்தின் புனர்வாழ்வுக்கு, நிதி தேடுவது மட்டும் தான் இதன் நோக்கமல்ல, எங்களின் முயற்சிகளையும் நடைபெறவுள்ள திட்டப்பணிகளையும் அவ்வப்போது உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் தான். எங்களின் செயல்பாடுகள் மீது நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட்டு இந்தப் புனர்வாழ்வுப் புனிதப் பயணத்தில் நீங்களும் பங்கேற்க வந்தால் மகிழ்ச்சியோடு அரவணைத்துக் கொள்வோம், அதே சமயம் யாரையும் நிர்ப்பந்தம் செய்வதோ அல்லது விளக்கம் கொடுக்காமல் வரவழைப்பதோ நமது விருப்பமல்ல.

ஒரு நல்ல அமைப்புக்கு அது வழிமுறையுமல்ல, இதயத்திலிருந்து இயல்பாக வருகிற உணர்வுகளால் மட்டுமே இது போன்ற பொதுப்பணியில் நல்ல பயனுள்ள விளைவுகளை ஸ்திரமாக ஏற்படுத்தமுடியம்.

உதவும் உள்ளங்களுக்கு உபதேசங்கள் அவசியமில்லை. எங்களின் நோக்கம் நல்லதாக இருக்கிறது. அதைச் செயல் படுத்தும் திட்டங்களும் தெளிவாகவிருக்கிறது. இதை எல்லாம் விட மனிதநேய சிந்தனை கொண்டோரின் ஆலோசனைகளும் ஆதரவுகளும் எங்களை வழி நடத்துகிறது. எனவே திறந்த மனதோடும் பரந்து கிடக்கும் தமிழ் மக்களின் ஆதரவோடும் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

ஓடி ஓடி ஓய்ந்து போன உடல்கள் மீது ஏறியிருந்து காரணங்கள் தேடுவது எமது நோக்கமல்ல, அதற்கான காலமும் இதுவல்ல. புனர்வாழ்வுக் காரியங்கள் செய்ய நிறைய இருக்கிறது. ஒவ்வொரு இரவையும் ஒரு யுகமாக கடந்து கொண்டிருக்கும் எமது மக்களின் துயர் துடைக்க தூய உள்ளத்தோடு தொடர்ந்து செல்கின்றோம். உலகெங்கும் பரந்து வாழும் நமது உறவுகள், குறுகிய சிந்தனைகளுக்கும், திட்டமற்ற செயல்களுக்கும் எக்காரணம் கொண்டும் செவி கொடுக்கமாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இதயத்தில் ஈரமுள்ளவர்களை, இயல்பான கருணை கொண்டவர்களை, எவராலும் திசை மாற்றவே இயலாது, என்பது எங்களின் திடமான நம்பிக்கை. நான், நீ என்கின்ற பாகு பாடுகள் எமக்கு இல்லை. நொந்து, இடிந்து, வீரியமற்று, முகாம்களில் வீழ்ந்து கிடக்கும் உறவுகளின் விடியலுக்காக இங்கு தவம் இருக்கிறோம்.

இனி இதயம் திறந்து இணையத்தளத்திற்கு வாருங்கள். அதோ மணி ஒலிக்கும் சத்தம், இனி மனித நேயக் காதுகளில் மட்டும் இந்த மடல் திறந்து ஒலிக்கட்டும்.

உலகம் தொடங்கிய காலம் தொட்டு நல்ல காரியங்கள் எதுவுமே தடையில்லாமல் நடந்ததாக வரலாறு இல்லை. இப்போதும் கூட அதுதான் நடக்கிறது. வாழ்வா சாவா எனத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு கரம் கொடுக்க மனமில்லாதவர்கள் விலகி இருக்கட்டும் தவறில்லை. அவர்கள் அப்படியே சாகட்டும் என்பது அவர்கள் நல்ணெணமாக இருக்கலாம். ஆனால் நாமும் அப்படி விட்டுவிட இயலாது.

 அது நமது இனம். களத்தில் இறந்தவர்களுக்காக எப்படித் துக்கப்படுகிறோமோ,  அதே சமயம் கண் முன்னே துடிக்கின்ற உறவுகளுக்கும் கரம் கொடுக்க முனைகின்றோம். உலகமெங்கும் எத்தனையோ தமிழ்மக்கள் வசதியாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக, வாழ்ந்து கொண்டு, ஊரில் உறவுகள் அநாதைகளாக செத்து மடிவதை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

எங்கள் மனித நேய தூய செயல்பாடுகளை, ஒருசிலர், அர்த்தமற்ற அறிக்கைகள், சொல்பிரயோகங்கள், இணையத்தளங்கள், மின்அஞ்சல்கள் மூலம் அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?

எல்லோருமே இவர்கள் போல் கைகட்டி வேடிக்கை பார்த்தால் நம் இனத்தின் அடையாளமே இந்தப் பூமியில் இல்லாது போகும். அறிவு பூர்வமான இந்த விடயங்களை எல்லாம் மனச்சாட்சி உள்ளவர்களும், நடுநிலமையடன் சிந்திக்கக்கூடியவர்களும், புரியாத அந்த ஒரு சில பேருக்கு புத்தியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

விபத்தில் சிக்கியவருக்கு, மருத்தவர் சிகிச்சை செய்யப்போனால் மனிதநேயம் உள்ள எவரும் தடுக்கவே மாட்டார்கள். அந்த “ஒரு சில பேர்” இதை தயவு செய்து நினைவில் கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
ஸ்ரீபதி

மேலதிக வாசிப்பிற்கு:

கேபி உடன் virtual interview : ஈழமாறன்

‘கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார்’ சார்ள்ஸ் அந்தோனிதாஸ் உடன் நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

Vavuniya_Townவவுனியா நகரசபை உறுப்பினர்கள் அதன் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். அவ்வறிக்கையில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் பிரதித் தலைவர் மு முகுந்தன் ஆகியோரது நடவடிக்கைகள் பற்றி மிகக் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். 29 விடயங்களைப் பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் தலைவர் பிரதித்தலைவர் மற்றும் ஏ.எல்.எம் முனவ்பர் ஆகியோர் தவிர்ந்த 8 நகரசபை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நகரசபைத் தலைவரின் ஊழல் நிதிமோசடி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றிய பல விடயங்களை இவ்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தள்ளது.

வவுனியா நகர சபைக்கான தேர்தல் சென்ற வருடம் ஓகஸ்டில் நடைபெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்நகரசபையை அதிக உறுப்பினர்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி கூட்டு கைப்பற்றியது.

நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்),  இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர

வவுனியா நகரசபைக்கு எஸ்என்ஜி நாதன் தலைவராக நியமிக்கப்பட்டார். கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற மு முகுந்தன் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்களிடையே தலைமைக்கான இழுபறியும் நீண்டகாலமாக இருந்து வந்தது. இப்போதைய நகரசபை பதவியேற்று 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை வவுனியா நகரத்திற்கு எவ்விதமான சேவையையும் வழங்கவில்லை என்றும் நகரசபையின் நிர்வாகம் செயற்திறனற்று இருப்பதற்கு நகரசபைத் தலைவரே முக்கிய காரணம் என்றும் நகரசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

TNA_in_Vavuniyaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நேரடியாக வந்து கலந்துகொண்டதுடன் பதவியேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டனர். நகரசபை உறுப்பினர்கள் ஆர் சம்பந்தன் முன்னிலையில் சத்தியப் பிரமாணமும் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த பத்து மாதங்களாக வவுனியா நகரசபை நிர்வாகம் எவ்வித செயற்பாடுகளையும் செய்யாமல் நகரசபைக்கு வழங்கப்பட்ட நிதியை தவறான முறையில் கையாண்டும் உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் மூவரும் கூட தங்கள் கட்சியின் நகரசபைத் தலைமைக்கு எதிராக கையெழுத்திட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நகரசபையையே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்க முடியாத நிலையை இவ்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கான வாழ்விடமாகியுள்ள வவுனியாவின் நகரசபை கடந்த 10 மாதங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நகரசபையின் தலைவர் எஸ்என்ஜி நாதனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கும் உள்ள நெருக்கமே எஸ்என்ஜி நாதன் இவ்வாறு செயற்படுவதற்குக் காரணம் என அபிவிருத்திக்கான இளைஞர் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குற்றம்சாட்டி உள்ளது.

வவுனியா நகரசபைத் தலைமையின் ஊழல் மோசடியும் நிர்வாகச் சீரழிவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் சென்ற ஆண்டு ஆளும்கட்சிக்கு தாவியிருந்தமை தெரிந்ததே. வெறும் பத்திரிகைக்கு அறிக்கைகள் தயாரித்து வழங்குவதன் மூலம் மட்டுமே தங்கள் வெள்ளை வேட்டி அப்புக்காத்து அரசியலைத் தொடர முடியாது என்பதனை வவுனியா நகரசபை வெளிப்படுத்தி உள்ளது.

._._._._._.

Vavuniya_UC_Members_Signaturesவவுனியா நகரசபை உறுப்பினர்களின் கையெழுத்துடன் வெளியாகி உள்ள அறிக்கை:

வவுனியா நகரசபை நிர்வாகச் செயற்பாடுகள்

கனம் கௌரவ தலைவர் கனம் கௌரவ உப தலைவர் செயலாளர் அவர்கட்கு

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற வவுனியா நகரசபைத்தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பிரிதிநிதிகள் இடம்பெறாது நகரசபை இயங்கியது அத்தோடு இலங்கையில் யுத்தம் முடிவுற்று ஒரு ஜனநாயக சூழலில் காணப்பட்டதுடன் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த சந்தர்ப்பத்தில் இத்தேர்தல் இடம் பெற்றது.

மக்கள் பிரதிநிதிகளினால் நகரசபையினை கைப்பற்றிய பின்னர் முதலாவது கூட்டத்திலிருந்தே சகல உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் நாம் ஆதரவினை இச்சபைக்கு இதுவரை வழங்கியிருந்தோம். ஆனால் இன்று நடைபெறும் 10வது கூட்டத்தில் நாம் பிரசன்னமாகி இருக்கின்றோம். ஆனால் இதுவரை இச்சபை உருப்படியான எந்த ஒரு வேலைத்திட்டத்தினையும் இச்சபைக்கு பொறுப்பாக இருந்து செயற்படுகின்ற கௌரவ தலைவர் கௌரவ உப தலைவர் செயலாளர் ஆகிய மூவரும் திறம்பட செயற்படவில்லை என்பதை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்

தங்கள் மூவரினதும் செயற்பாடுகள் சம்பந்தமாக வவுனியா நகரில் இருக்கின்ற கல்விமான்கள், உத்தியோக சமூகத்தினர், வரியிறுப்பாளர்கள், வாக்காளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகள் பல்வேறுபட்ட விமர்சனங்களை சுமத்தியுள்ளனர்

அந்த வகையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்கள் நலன் கருதி தொடர்ந்தும் உங்களுடைய சீர்கேடான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை மீண்டும் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

01.மக்கள் பிரதிநிதிகள் வவுனியா நகரசபையை பொறுப்பேற்றபிற்ப்பாடு சபையில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நகரபிதாவே பொறுப்புக்கூற வேண்டியவர் ஆவார். அப்படி இருக்கையில் சபையின் நடவடிக்கைகளை இலகுப்படுத்தவும் விரிவாக்கம் செய்வதற்கும் கௌரவ உப தலைவர் கௌரவ உறுப்பினர்கள் செயலாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்களுக்கான அதிகாரங்களை எழுத்து மூலம் கையொப்பமிட்டு அதை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை.

02. சபையின் முதலாவது கூட்டத்திலேயே சபையின் கொடுப்பனவுகளை செய்வதற்கு கையொப்பமிடும் அதிகாரங்களினை குறிப்பிட்ட சபையின் உறுப்பினர்கள் மத்தியில் தீர்மானம் எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு செய்ப்படவில்லை.
உதாரணம்:- வங்கிக்காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம்.

03. வட்டாரரீதியாக கிரமமாக குப்பை அகற்றும் நடவடிக்கை இன்றுவரை சரிவர முன்னெடுக்கப்படவில்லை. மற்றும் வீதிப்பாரமரிப்பு மிகமோசமான நிலையில் உள்ளது. மற்றும் அகற்றப்பட்ட குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு மீள்பாவனைக்கு எடுக்கப்படவில்லை. மற்றும் PHI கிரமமாக குப்பை அள்ளும் பணிகளை ஒவ்வொரு வட்டார ரீதியில் செய்யவில்லை. இது பற்றி விளக்கம் தரவும்.

04. 2009.10.28 ல் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உப குழு தெரிவு செய்தல் தொடர்பான நடவடிக்கை இதுவரையும் எடுக்கப்படவில்லை.

05. 2009.10.28 நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் உணவு விடுதி அமைத்தல் புத்தக நூல்களினை கணணிப்படுத்தல் நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்களை திருத்துதல். ஆளணி அட்டவணையினை சமர்ப்பித்தல் வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை செய்யப்படவில்லை.

06. கோவில்குளத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கு ரூபா177180.66 ஒப்பந்தக்காரர் F J V அகிலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பாடசாலை நகரசபைக்கு சொந்தமானதா?

07. 20.01.2010 அன்று நடைபெற்ற நான்காவது கூட்டத்தில் தீர்மானம் இல.04இல் வீதிகளுக்குப் பொருத்துவதற்கு 25 நீர்க்குழாய்கள்(போக்) கொள்வனவு செய்வதற்கு சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது இருந்த போதிலும் இதுவரை நீர்க்குழாய்கள் பல இடங்களில் போடப்படவில்லை. போடப்பட்டபின் அதன் பழைய நீர்க்குழாய்(கல்வெட்டு) திருப்பி நகரசபைக்கு ஒப்படைக்கப்பட்டதா?

08. 24.02.2010 அன்று நடைபெற்ற 5வது கூட்டத்தில் 31.01.2010 வங்கிக் கூற்றின்படி ரூபா 22727963.12 பணம் இருந்தது. ஆனால் ஏனைய உறுப்பினர்கள் உடனடி புதிய வேலைகளினை கேட்கும் போது மற்றும் ஒப்பந்தம் வழங்கிய பின்னர் வேலை முடிவடைந்த நிலையில் சபையிலே பணம் இல்லையென பலதடவைகள் கூறியுள்ளனர். இதற்கு உதாரணம்:- வெளிக்குளத்தில் அமைந்துள்ள ஒளவையார் வீதி, சின்னபுதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த வீதி அதே போன்று ஏனைய சிறு வீதிகள்.

09. 21.04.2010 அன்று நடைபெற்ற 7வது கூட்டத்தில் தீர்மான இல.4ல் பூந்தோட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள பொலீஸ் பாதுகாப்பு நிலையம், பூந்தோட்ட சந்தியில் குளக்கட்டு வீதியை மறித்துள்ள பொலீஸ்காவல் அரணை அகற்றி மக்கள் போக்குவரத்துக்கு அவ்வீதியினை விடுவிப்பதாக சபை ஏகமனதாக தீர்மானித்தது. இதுவரைஅது மேற்கொள்ளப்படவில்லை.

10. கந்தசாமி கோவில் வீதியில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கடைத்தொகுதிக்கு புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. அப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பின் நகர அபிவிருத்தி அதிகார சபைச்சட்டத்திற்கு அமைய வாகன தரிப்பிடம் வழங்கப்படவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

11. நகரசபைக்கு சொந்தமான பழைய பதிய வாகனங்கள் நகரசபை நிர்வாக நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய, மற்றைய தனிப்பட்ட முறையில் தலைவர், உப தலைவர், செயலாளர் பயன்படுத்துவதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. இது பற்றி சபைக்கு தெரியப்படுத்துங்கள். மற்றும் 19.06.2010 சனிக்கிழமை, 20.06.2010 ஞாயிற்றுக்கிழமை கௌரவ உப தலைவர் மு முகுந்தரதன் அவர்களால் அவரது தனியார் கல்வி நிறுவன வகுப்பிற்காக ஏனைய தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு மாங்குளம் மல்லாவிக்கு வாகனம் பாவிக்கப்பட்டுள்ளது. அதன் உண்மை நிலை என்ன?

12. கடந்தகாலங்களில் வவுனியா நகரசபையினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வந்த பௌர்ணமி கலைவிழா நிகழ்ச்சியை மீண்டும் நடாத்தும்படி பல தடவைகள் கேட்கப்பட்டபோதிலும் இதுவரை தலைவர் முடிவு எடுக்கவில்லை. இதனால் இளம் கலைஞர்க்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

13. டெங்கு ஒழிப்புத்திட்டத்திற்கு கௌரவ ஆளுனரால் ரூபா4800000 (ரூபா48 லட்சம்) பணம் வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்டது. இப்பணம் தலைவர் உப தலைவர் செயலாளர் Dr சத்தியமூர்த்தி என்பவர்களினாலே கையாளப்பட்டது. இதுவரை அதற்கான கணக்கறிக்கை சபையிலே சமர்ப்பிக்கப்படவில்லை.

14. தர்மலிங்கம் வீதி முடிவடையும் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள நகரசபை அங்கீகாரம் வழங்காத மூன்று கடைகளினை அகற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் சபையிலே பத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில், பின்னர் அக்கடையினை அகற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சபையிலே தீர்மானம் எடுக்கப்பட்டது. இது தலைவரின் கபடப்போக்கை காட்டுகின்றது.

15. ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வாளிக்கிணற்றிக்கு உட்செல்லும் கதவின் ஒரு பகுதியினை மூடி நகரசபையின் சபை அங்கீகாரமில்லாமல் 16 அடி நீளமான கடையொன்று கட்டப்பட்டு அதற்கு வாடகை அறவிடப்படுகின்றது. அப்பணம் சபைக்கு கிடைக்கின்றதா? என்பதை எமக்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தடன் கற்கழி வீதியில் உள்ள ஓர் ஒழுங்கையை இடைமறித்து கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது பற்றி நகரசபைத் தலைவர் அறிந்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்?

16. பூந்தோட்டச்சந்தியில் அமைந்துள்ள வடிகாலைத் திருத்தி கழிவுநீரினை சீராக ஓடும் நிலைக்கு அதில் அமைந்துள்ள கல்வெட்டினை அகற்றி புதியதொரு கல்வெட்டினைப் போட்டுத் தருமாறு பல தடவை Dr பஞ்சலிங்கம் அவர்களால் எழுத்துமூல கடிதம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்?

17. சபைக் கூட்டங்களின் போது கௌரவ உறுப்பினர்களால் தெரிவிக்கப்படும் மக்கள் நலன் சார்ந்த தேவைகள், கருத்துக்கள், பிரச்சினைகளை எடுத்துரைக்கும்போது வேண்டுமென்றே செயலாளர் அவர்கள் கூட்ட அறிக்கையில் அவற்றை சேர்த்துக் கொள்ளப்படாதது ஏன் என்பற்கு சரியான விளக்கம் கூறப்பட வேண்டும்

18. கௌரவ தலைவர் அவர்கட்கு ரூபா6800000 (ரூபா68 லட்சம்) பெறுமதியான வாகனத்தினை கொள்வனவு செய்யும்போது சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பதற்கு அப்பால் கூறுவிலை கூறப்பட்டதா? இயந்திரப் பொறியியலாளர் ஒருவரின் தராதர அறிக்கை பெறப்பட்டதா? என்பதை கௌரவ உறுப்பினர்களுக்கு அறியத்தர வேண்டும். ஏன் இதைக் கேட்கிறோம் என்றால் அண்மையில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் தவறான பாவனையின் காரணமாக வவுனியா நகரசபை எல்லைக்குள் விபத்துக்கு உள்ளாகியிருந்தும் அவ்வாகனம் கொழும்புவரை சென்று திரும்பி வந்தமையினால் அவ்வாகனத்தில் மிகப்பெரிய பிழை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடத்தில் நடைபெற்ற விபத்தை அங்கு நடைபெற்றதாகக் காட்டாமல் அது வேறு இடத்தில் நடந்ததாகக் காட்டி காப்புறுதி பெறப்பட்டுள்ளது. அதன் உண்மை நிலை இதுவரை சபைக்குத் தெரியப்படுத்தவில்லை. இதன் உண்மை நிலை என்ன?

19. நகரசபை உத்தியோகத்தரை ஊழியர்களை இடம்மாற்றம் செய்யும்போதோ அல்லது இடைநிறுத்தும்போதோ அல்லது பதவி உயர்வு வழங்கப்படும்போதோ சபையின் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
உதாரணமாக:- T O சிவராமன், வேலைப்பகுதியை சேர்ந்த சிற்றூழியர் பாஸ்கரன்.

20. கச்சேரியினால் நகரசபைக்கு வழங்கப்பட்ட வேலைப்பகுதி ஒன்று சூசைப்பிள்ளையார் குளம் சனசமூகநிலையத்தின் ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சபையின் எந்தவித அங்கீகாரம் இல்லாமல் ரூபா500000 (ரூபா 5 லட்சம்) முற்பணமாக வழங்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளோம். சபையின் அங்கீகார முறை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். இதன் உண்மைநிலை என்ன?

21.சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு கௌரவ நகரசபைத்தலைவரின் அங்கீகாரத்துடன் குறிப்பிட்ட வீதியொன்று ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டு வேலை முடிவுற்ற நிலையில் கௌரவ நகரசபைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டும் ஒப்பந்தக்காரருக்கு இவ்வேலை திருப்திகரமாக முடிவுற்றுள்ளது என்பதை கூறியுள்ளார். தற்போது செயலாளர் முடிவுற்ற வேலைக்கான கொடுப்பனவினை வழங்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார். எனவே இவ்வேலையை முடித்துக்கொடுத்த ஒப்பபந்தக்காரர்கள் சனசமூகநிலைய நிர்வாகம் மிகமோசமான நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிகின்றோம். இதன் உண்மை நிலை என்ன?

22. 25.06.2010ல் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றதாக விசேட கூட்ட அறிக்கை கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் பற்றி அறியத்தருவது யாதெனில்

1. இக்கூட்டத்தில் செயலாளர் பங்கு பற்றவில்லை.
2. கூட்டம் சபா மண்டபத்தில் நடைபெறவில்லை.
3. கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விசேட கூட்ட அறிக்கையில் தலைவர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளார் செயலாளரின் கையொப்பம் காணப்படவில்லை.
4. கூட்டத்திற்கு கௌரவ இ. சிவகுமார், கௌரவ சு குமாராசாமி சென்றிருந்தனர் கௌரவ தலைவர் அறையிலேயே இவ்விரு உறுப்பினர்களுடனும் தலைவர் அவர்கள் கதைத்து குளிர்பானமும் வழங்கி ஏனைய உறுப்பினர்கள் வராததினால் கூட்டத்தினை வேறொரு நாள் கூடுவதாக தலைவர் கூறியிருந்தார்.
5. அன்று நடைபெற்ற கூட்டத்தில் கௌரவ JADL ஜெயசேகரா வரவல்லை அவர் வந்ததாக கூட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்ட காரணங்களினால் இக் கூட்டம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது

23. வாகனத்திற்கு தேவையான எரிபொருட்கள், பயன்படுத்தப்படும் ரயர்கள் மற்றும் சபைக்கு தேவையான பொருட்கள் மக்கள் பிரிதிநிதிகள் சபையினை பொறுப்பேற்ற பிற்பாடு கூறுவிலை கோரி பெறப்பட்டதா என்பதை இச்சபைக்கு இதுவரை அறியத்தரப்படவில்லை. இதற்கான முழுவிளக்கத்தையும் தரவும்.

24. மக்கள்பிரதிநிதிகள் சபையை பொறுப்பேற்றபின்னர் இன்று வரைநடைபெற்ற சகல நடவடிக்கைகளுக்கமான கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்பதனை சபைக்கு அறியத்தருகிறோம்.

25. வீதி விளக்கு போடுவதற்கு நகர சபைக்கு பணம் ஒதுக்கப்பட்டது இன்றுவரை பல வீதிகளுக்கு மின்விளக்கு போடப்படவில்லை. இதன் உண்மைநிலை என்ன?

26. அண்மையில் இசைநிகழ்ச்சி ஒன்று நகரசபை மைதானத்தில நடைபெற்றது. இதன் வரி விபரத்தினை அறியத்தரவும். அத்தோடு நகரசபை நடாத்துவதாக பத்திரிகையில் விளம்பரம் போடப்பட்டது. இதற்கான சபை அனுமதி பெறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

27. அண்மையில் பல வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைநிலை என்ன?

28.வவுனியாகுளத்தில் உள்ள தனியார் காணி ஒன்று எடுக்கப்பட்டு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு இடைநடுவிலே கைவிடப்பட்டுள்ளது. இதுவரை சபைக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதன் உண்மைநிலை என்ன?

29.சிங்கள மொழிபெயர்ப்பாளர் தேவையென பலதடவை கௌரவ உறுப்பினர் JAD லலித்ஜெயசேகர என்பவரால் சபையிலே கூறியபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை

மேற்கூறப்பட்ட விடயங்களுக்கு சபை சரியான பதிலை தரும் பட்சத்தில் தொடர்ந்தும் சபைக்கு ஆதரவு வழங்குவோம் சரியான பதில் கிடைக்காவிடில் இதுவரை நாம் வழங்கி வந்த ஆதரவினை விலக்கிக்கொள்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

கடந்த 10 மாதமாக கௌரவ தலைவர், கௌரவ உப தலைவர் என்பவருக்கான வாகனம், குளிரூட்டி(AC) தளபாடங்கள் என்பவற்றிக்கு பல லட்சம் ரூபா சபைப்பணத்தினை விரயமாக்கியிருந்தும் எந்தவொரு உருப்படியான வேலையும் இதுவரை செய்யப்படவில்லை என்பதனையிட்டு பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாம் எமது ஆட்சேபனையை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
வணக்கம்.

Vavuniya_UC_Members_Signatures1. .கௌரவ செ சுரேந்திரன் (TNA)
2. .கௌரவ ஜி ரி லிங்கநாதன் (DPLF)
3. .கௌரவ தேசமானய சு குமாரசாமி (DPLF)
4. .கௌரவ க பார்த்தீபன் (DPLF)
5. .கௌரவ இ. சிவகுமாரன் (TNA)
6. .கௌரவ ஜ.கனகையா (TNA)
7. .கௌரவ M S அப்துல்பாரி (PA)
8. .கௌரவ J A D லலித்ஜெயசேகர (PA)

தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

Tamil_PP_28July10தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்று (July 28 2010) பிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.

Tamil_PP_28July10கடந்த மாதம் 24ம் திகதி தமது ஆரம்ப சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் இம்மாதம் 2ம் திகதி இரண்டாவது சந்திப்பில் திட்ட வரைபுகளை மேற்கொள்ளுமுகமாக சகல கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றினையும் அமைத்திருந்தனர். கடந்த 4ம் திகதி ( தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு ) கூடிய தமிழ்க்கட்சிகளின் அரங்க உபகுழுவினர் தயாரித்த திட்ட வரைபுகள் இம்மாதம் 7ம் திகதி கலந்தாலோசிக்கப்பட்டு அதன் நோக்கங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டது. ( ”தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைய வேண்டும்.” எம்.கே.சிவாஜிலிங்கம் )

இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் ஒன்றுகூடிய அரங்கத்தினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக் களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடினர்.

Tamil_PP_28July10தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்த வகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

Tamil_PP_28July10இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ( தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டமைப்பிற்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ,  பொது இணக்கப்பாட்டிற்கு வர தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஈ.பி.டி.பி அழைப்பு!)

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

sitharthan.jpg”போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்” என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் புளொட் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், ”போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் முற்றுமுழுதாக ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை எவருமே மேற்கொள்ளவில்லை. அனைவருமே புலிகள் இயக்கப் போராளிகள் பற்றியும் அல்லது புலிகள் அமைப்பில் இருக்கக்கூடிய விதவைகள் பற்றியுமே பேசுகிறார்களே தவிர மாற்று இயக்கங்களில் இருந்து விடுபட்ட கடந்தகால போராளிகள் அல்லது அந்த இயக்கங்களில் இருந்து பிரிந்த தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள் சம்பந்தமாக எவருமே கதைக்கவில்லை.

இது தொடர்பாக நான் அண்மையில் அமைச்சர் டியூ குணசேகர அவர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேறு பலருடனும் கதைத்து அவர்களுடைய புனர்வாழ்வையும் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன். அல்லது இதுபெரிய சமூகப் பிரச்சினையாக உருவாகும் என்பதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக திரு டியூ குணசேகர அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. குழுவை எதிர்ப்பதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் – சீமான் அறிக்கை

seeman.jpgஇலங் கையில் இடம்பெற்ற போர்க்குற்றத்தை ஆராயும் ஐ.நா. குழுவை எதிர்ப்பதை கண்டித்து ஜூலை 10-ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தமிழர் இயக்கத் தலைவரும் டைரக்டருமான சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழர் இயக்கத்தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, சிறிலங்காவின் போர் குற்றங்களை ஆராயப் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவை உலகமெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், இன விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்களும், வரவேற்றுள்ள போதிலும் பெயரளவில் கம்யூனிசும் பேசும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட 29 நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தியா இது குறித்து கருத்து எதும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கின்றது.

இந்தியா, ரஷியா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தாம் பெற்ற உதவிகளைக் கொண்டு எத்தகைய கோரத் தாண்டவத்தை இலங்கை ஆடியுள்ளது என்பதற்கு தினந்தோறும் பல்வேறு வகை சான்றுகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதிநவீன ரேடார்கள், உளவு பார்க்கும் கருவிகள், ரோந்துக்கப்பல்கள் உள்பட எண்ணற்ற ஆயுதங்களை தமிழர் களைக் கொன்றொழிக்க இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான போரில் தடை செய்யப்பட்ட 500 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள கொத்தக்குண்டு மற்றும் ரசாயன ஆயுதங்களை ரஷ்யா இலங்கைக்கு போர் காலத்தில் விற்பனை செய்துள்ளது.

சீனாவோ இந்தியாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களைக்கொன்று குவிப்பதற்கு உதவிகளை வாரி வழங்கி வருகின்றது. கடந்த ஆண்டு மட்டும் உலக வங்கியை விட அதிகளவில் சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கி உள்ளது.இப்பொழுது போர் முடிந்த பின்னும் சீனா இலங்கைக்கு 3021 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இது தவிர தனது நாட்டில் கொடும் குற்றம் புரிந்த 25,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகலிடமாக ஈழத்தை சீனா மாற்றிக்கொண்டு வருகின்றது.

இவ்வாறு இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தனக்கு அனுசரணையாக இருக்கும் தைரியத்தில் சர்வ தேசத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இதர ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் கொன்று குவித்த சிங்கள ராணுவம் இப்பொழுது விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கின்றது. மேலும் மேலும் இந்த நாடுகளிடம் இருந்து இலங்கை அரசு இன்று வரை உதவிகளையும் போட்டி போட்டுக் கொண்டு பெற்று வருகின்றது.

இதன் மூலம் இத்தகைய நாடுகள் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு பகிரங்கமாகத் துணைபோகின்றன. இத்தகைய நிலையில் கண் முன்னே நடக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துவதும் அதற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுப்பதும் நம் அனைவரின் கடமை.

ஆகவே முதற் கட்டமாக வரும் ஜூலை 10-ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தெரிவிக்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

மாலைமலர்

கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான் : ஐ.நாவிடம் புகார் கொடுக்கும் அதிமுக – ஜெயலலிதா.

jaya.jpgமுதல்வர் கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்ஸ அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால்,  இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்ஸவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும் என சர்வதேச சட்டம் கூறுகிறது.

போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர்.

ராஜபக்ஸ சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

எனவே, இலங்கைக்கு ஐ.நா. குழுவினர் வரும்போது அதிமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி கருணாநிதி குறித்து புகார் தரப்படும். கருணாநிதி போர்க்குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

‘யார் இந்த கே.பி?’ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி

Anandasangaree Vஅரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்?

யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள் புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூது குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?. சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும் அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.

திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள் கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூது குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியாவார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?

சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு கேபியோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும். இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஜீவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள் நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இவர்களுக்கு இதுவரை காலமும் களநிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது.  இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும்  ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 பேர் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ போர் தமது பார்வைகளையும் கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள் ஒரு காலால் நடப்பவர்கள் தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஜீவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும் சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா மன்னார் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார் வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஜீவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எநத் ஒரு நாடும் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடீத்துள்ளன.

இத்தகைய நபர்களே நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவாகளை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் ஏன் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னனியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்ககுதல் கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு  முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.

இந்த நபர்களின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுகந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.

இது பலவிதத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும். கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக் கோரி ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் – ஜெயலலிதா பரிந்துரை

1jaya.jpgஇலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் ஒன்றை பரிந்துரை செய்திருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னரே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டுமென்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக அநாதைகளாக அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த வருடம் இலங்கையில் போர் முடிந்தவுடன் கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு வந்தனர்.

இலங்கை ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச்சென்றார்.இலங்கை ஜனாதிபதி வருகிறார் என்றவுடனேயே இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80,000 இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்ப இலங்கை ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென பிரதமருக்கு வழக்கம் போல கடிதம் எழுதினார் கருணாநிதி.உடனே இந்தியப் பிரதமரும் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை ஜனாதிபதி தன்னிடம் உறுதி அளித்ததாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தமிழ்ப் பெயரில் இருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக்கூற முயற்சி நடப்பதாகவும் போரின்போது சிதைந்துபோன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றைக் கட்டித்தர நடவடிக்கையெடுக்காமல் புத்த விகாரைகள் புதிது புதிதாகக் கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபா மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபா நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்தளவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

2009 ஆம் ஆண்டு தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்டபோது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படுமென்று உறுதியளித்தார் இலங்கை ஜனாதிபதி.

தற்போது, இந்தியப் பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவதாக உறுதியளித்திருக்கிறார். இந்த உறுதிமொழி செயற்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர் தெரிவித்துள்ள திட்டங்கள்:

1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

2. மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.

3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

5. மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

7. புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.

8. பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

10. போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.

11. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.

12. கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13. போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.

14. ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.

15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்.

17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

18. பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Dinamani